Posts

Showing posts from August, 2023

ஆவணப் பதிவிற்கு தாய்ப்பத்திரம் அவசியம்

ஆவணப் பதிவிற்கு தாய்ப்பத்திரம் அவசியம் வீடு, மனை  உள்ளிட்ட சொத்துக்கள் மீதான ஆவண பதிவுக்கு சம்பந்தப்பட்ட மனை, இடம் அல்லது வீடு ஆகியவற்றின் முன் ஆவணம் (தாய்ப்பத்திரம் அல்லது மூலப்பத்திரம்) அவசியம் என்று சமீபத்தில் பதிவுத்துறை அறிவித்துள்ளது. வீடு, மனை  உள்ளிட்ட சொத்துக்கள் மீதான ஆவண பதிவுக்கு சம்பந்தப்பட்ட மனை, இடம் அல்லது வீடு ஆகியவற்றின் முன் ஆவணம் (தாய்ப்பத்திரம் அல்லது மூலப்பத்திரம்) அவசியம் என்று சமீபத்தில் பதிவுத்துறை அறிவித்துள்ளது. மேலும், அத்தகைய மூலப்பத்திரங்கள் சார்–பதிவாளர் மூலம் சரிபார்க்கப்பட்டு, உறுதி செய்யப்பட்ட பின்னர் அதற்கான புதிய ஆவணங்கள் பதிவு செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.   வங்கி சான்றுகளும் முக்கியம் பதிவுக்காக  வரும் குறிப்பிட்ட சொத்து தொடர்பான மூலப்பத்திரங்கள் தொலைந்து போயிருக்கும் பட்சத்தில், அதன் பொருட்டு காவல்துறை அளித்த சான்றுகள் சரி பார்த்துக் கொள்ளப்பட வேண்டும்.  மேலும்,  சம்பந்தப்பட்ட சொத்துக்களின் மீது வங்கிக்கடன் பெற்றிருப்பது அல்லது அடமானம் வைத்திருப்பது போன்ற நிதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டிருக்கும் பட்சத்தில் அதன்பேரில் வங்கியால் அளி

அடுக்குமாடி வீடுகள் குடியிருப்புச் சங்கம் அவசியமா?

அடுக்குமாடி வீடுகள் குடியிருப்புச் சங்கம் அவசியமா? அடுக்குமாடி  வீடுகள் குடியிருப்புச் சங்கம் அவசியமா? புதிதாக வீடு வாங்க நினைப்பவர்களுக்குக் கைகொடுப்பது அடுக்குமாடி வீடுகள்தான். தனி வீட்டில் இருப்பதற்கும், அடுக்குமாடி வீட்டில் இருப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. அடுக்குமாடி வீட்டுக்குள் எந்த பராமரிப்பையும் வீட்டு உரிமையாளரால் செய்துவிட முடியும். ஆனால், வெளிப்புறங்களில் சில பணிகளை தனியாகச் செய்துவிட முடியாது. குடியிருப்பில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்துதான் செய்ய முடியும். குறிப்பாக  அடுக்குமாடிக் கட்டிடங்களில்  வெளிப்புறப் பகுதிகளில் ஏற்படும் பிரச்சினைகளைச் சரி செய்வது, பராமரிப்புப்  பணிகளை மேற்கொள்வதில் யாரும் தனித்துச் செயல்பட முடியாது.  ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கருத்து சொல்வார்கள். செலவு என்றாலும் பெரு மூச்சு விடுவார்கள்.  அனைவரும் ஒத்துழைத்தால்தான் பணிகள் நடக்கும் என்பதைப் பலரும் புரிந்து கொள்ள மாட்டார்கள்.  ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் செல்வதைத் தடுக்க அடுக்குமாடிக் குடியிருப்பில் வீட்டு உரிமையாளர்கள் நலச் சங்கம் அமைப்பது அவசியம். இப்படி ஓர் அமைப்பு இருந்தால் மட்டும

வெளிநாட்டில் வசிப்பவர்களும் வீட்டு மனை வாங்கலாம்

வெளிநாட்டில் வசிப்பவர்களும் வீட்டு மனை வாங்கலாம்... வெ ளிநாடுகளில்  வசிக்கும் நம் நாட்டவர் தமது ஊரில் சொந்த வீட்டை கட்ட விரும்புவது வழக்கம். உள் நாட்டில் வசிப்பவர்கள் எந்த ஊரிலும் சொந்த வீடு கட்டுவது எளிதானது. ஆனால் அவர்களே வெளிநாட்டில் வசித்தால், மனை வாங்குவது அதில் சொந்த வீடு கட்டுவது ஆகியவற்றில் பலவித சட்ட திட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன.  பல குடும்பங்களில்  வெளிநாட்டு வேலை பார்க்கும் குடும்ப அங்கத்தினர்கள் இருப்பார்கள். தமது குடும்ப நலனுக்காகவும், சேமிப்பாகவும் வீடு அல்லது மனை வாங்க அவர்கள் விரும்பும்போது, நடைமுறையில் எவ்வகையிலான சட்ட திட்டங்களை பின்பற்ற வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம். முக்கியமான வாடிக்கையாளர்        வெளிநாட்டில் வசிப்பவர்களும் வீட்டு மனை வாங்கலாம் இந்தியாவில்  மனை வாங்க அல்லது வீடு கட்ட விரும்பும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு கடன் தர, நிதி நிறுவனங்கள் எளிமையான நடைமுறைகளை கொண்டுள்ளன. என்.ஆர்.ஐ. எனப்படும்  அவர்களை நிதி நிறுவனங்கள் தங்களது முக்கியமான வாடிக்கையாளராக கருதுகின்றன. ஏனெனில், வீட்டு கடனை  சரியான நேரத்தில் அவர்கள் திருப்பி செலுத்துவதற்கு பொருளாதார

வீட்டை ஏலம் விடும் நடைமுறை என்ன

வீட்டை ஏலம் விடும் நடைமுறை என்ன இந்தியாவில்  வீட்டுக் கடன் வாங்குபவர்கள் பெரும்பாலும் 7 முதல் 10 ஆண்டுகளில் கடனை அடைத்துவிடுவதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அதேசமயம் வங்கிகளில் வீட்டுக் கடன் வாங்கி அதைத் திருப்பச் செலுத்த முடியாதவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகக் கூறுகின்றன புள்ளிவிவரங்கள். வீட்டுக் கடனைத்  திருப்பிச் செலுத்தாவிட்டால் என்னவாகும்? திருப்பிச் செலுத்த முடியாதவர்களின் வீடுகளை வங்கிகள் திருப்பி எடுத்துக் கொள்ளும். அந்த வீட்டை ஏலம் விடும். இப்படி வங்கி விடும் ஏல வீட்டை வாங்குவது லாபமா, நஷ்டமா? பெருந்தொகையைத்  திரட்டி வீடு வாங்குவது எல்லோருக்கும் இயலாத காரியம். இன்று வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன்கள் மூலமே பலருக்குச் சொந்த வீடு என்ற கனவு நனவாகிறது. பழைய வீடு, புதிய வீடு என்று பார்க்காமல் வீடு வாங்குபவர்கள் இருப்பதுபோல ஏல வீட்டை  வாங்கவும் பலர் இருக்கிறார்கள். ஏல வீட்டை வாங்கப் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். பொதுவாக  வீடு வாங்கும்போது பல விஷயங்களை ஆராய்ந்துதான் வாங்குவோம். ஏல வீடு என்றால், வங்கிகளே வீட்டை விற்பதால் பலரும் அதை சவுகரியமாக உணருகிறார்கள். எந்த விஷயத்திலு

வீட்டுக்கடன் எளிதாக கட்டுவது எப்படி?

Image
வீட்டுக்கடன் எளிதாக கட்டுவது எப்படி? கடனை  லட்ச லட்சமாக வாங்கிவிட்டு கடனை விட இரண்டு மடங்காக வட்டிகட்டி ஆயுள் முழுக்க EMI ல்  தத்தளிப்பவர்களுக்கு ... சுலபமாக திரும்பச் செலுத்த 3 வழிகள்! இலட்சக்கணக்கான  தொகையை மொத்தமாக புரட்டி வீடு வாங்க முடியாது என்பதாலும்,  திரும்பக்  கட்டும் மாதத் தவணைக்கு வட்டி மற்றும் அசலில் வரிச் சலுகை கிடைக்கிறது என்பதாலும் பலர் வீட்டுக் கடன் வாங்கி இருக்கிறார்கள். இந்த வீட்டுக் கடனை விரைவாக கட்டி முடிக்கவே பலரும் விரும்புகிறார்கள். இந்தியாவில்  15 ஆண்டுகள், 20 ஆண்டுகளுக்கு என வீட்டுக் கடன் வாங்கி இருந்தாலும் அதனை சராசரியாக எட்டு ஆண்டுகளில் கட்டி முடித்துவிடுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வீட்டுக் கடனை  தேர்ந்தெடுத்த காலம் வரை கட்டினால், கட்டும் வட்டி அதிகமாக இருக்கும். இதனை ஓர் உதாரணம் மூலம் பார்க்கலாம். # கடன் தொகை ரூ. 25 லட்சம் # திரும்பக் கட்டும் காலம் 30 ஆண்டுகள் (360 மாதங்கள்) # வட்டி: 10% # மாதத் தவணை ரூ. 21,939 இங்கே  வாங்கும் கடனோ ரூ.25 லட்சம் தான். ஆனால், அதற்கு கட்டும் வட்டியோ ஏறக்குறைய ரூ.54 லட்சம். (பார்க்க: அட்டவணை 1) இப்படி  கடைசி வரைக்கும் க

கவனம் செலுத்த வேண்டிய இரட்டை ஆவண சிக்கல்

கவனம் செலுத்த வேண்டிய இரட்டை  ஆவண சிக்கல் நகர்ப்புறம்  அல்லது புறநகர் பகுதிகளில் வீடு அல்லது மனை வாங்குபவர்கள் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டிய முக்கியமான விஷயம் இரட்டை ஆவணம் (Double Document) என்ற சிக்கலாகும். நகர்ப்புறம்  அல்லது புறநகர் பகுதிகளில் வீடு அல்லது மனை வாங்குபவர்கள் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டிய முக்கியமான விஷயம் இரட்டை ஆவணம் (Double Document) என்ற சிக்கலாகும். அதாவது, ஒரே சொத்துக்கு பதிவு செய்யப்பட்ட இரண்டு பத்திரங்கள் இருப்பதாகும். இரட்டை ஆவண சிக்கல் என்பது போலி பத்திரம் என்பதிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். இதுபற்றி ரியல் எஸ்டேட் சட்ட வல்லுனர்கள் தெரிவித்த தகவல் தொகுப்பை இங்கே காணலாம். கிரையப் பத்திரங்கள் போலி பத்திரம்  என்பது ஒரு பத்திரத்தின் இன்னொரு புதிய நகல் சட்ட விரோதமாக தயார் செய்யப்படுவதாகும். இரட்டை பத்திரம் என்பது ஒரு சொத்துக்கு இரண்டு உரிமையாளர்கள் மற்றும் இரண்டு பத்திரங்கள் இருக்கும் நிலையாகும். அந்த இரண்டு பத்திரங்களும் முத்திரை தாள் ஆவணமாக சார்பதிவு அலுவகத்தில் முறையாக பதிவும் செய்யப்பட்டிருக்கும். நடந்தது எப்படி..? கிட்டத்தட்ட  33 வருடங்களுக்கு முன்

ரியல் எஸ்டேட் துறையில் குவியும் முதலீடுகள்.. இதுதான் ஸ்மார்ட் ஐடியாவா..?

ரியல் எஸ்டேட் துறையில் குவியும் முதலீடுகள்.. இதுதான் ஸ்மார்ட்  ஐடியாவா..? இந்திய  முதலீட்டு சந்தை அதிகப்படியான மாற்றங்களையும், சரிவுகளையும் சந்தித்து வரும் நிலையில் பல முதலீட்டாளர்களுக்குக் குறிப்பாக ரீடைல் முதலீட்டாளர்களுக்குப் பாதுகாப்பான முதலீடுகள் அதிகளவில் தேவைப்படுகிறது. இந்த  வகையில் இந்தியர்கள் எப்போதும் பாரம்பரியமாக நம்பும் ரியல் எஸ்டேட் துறையில் 2022 ஆம் ஆண்டின் முதல் 6 மாதத்தில் மிகப்பெரிய அளவிலான முதலீட்டை பெற்றுள்ளது. ரியல் எஸ்டேட் துறை இந்திய  ரியல் எஸ்டேட் துறையில், நிறுவன முதலீடுகள் அதாவது Institutional investments 2022 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் மட்டும் சுமார் 2.6 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது  2021 ஆம் ஆண்டு முதல் அரையாண்டைக் காட்டிலும் 14 சதவீதம் அதிகமாகும். கோவிட்-19 தொற்று பாதிப்புக்குப் பின்பு, இந்திய ரியல் எஸ்டேட் துறையில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து வருகிறது. ரஷ்யா - உக்ரைன் போர் குறிப்பாக  ரஷ்யா - உக்ரைன் போருக்கு பின்பு அமெரிக்கா பிரிட்டன் நாடுகள் வட்டி விகிதத்தை உயர்த்தியதால் பங்குச்சந்தை முதலீடுகள் அதிகப்படியான தடுமாற்றங்களை எதிர்கொண்டது. இதன் மூ

ஏன் வாடகை ஒப்பந்தம் 11 மாதம் மட்டும் செய்யப்படுகிறது தெரியுமா..?

ஏன் வாடகை ஒப்பந்தம் 11 மாதம் மட்டும் செய்யப்படுகிறது தெரியுமா..? நீங்கள்  எப்போதாவது ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருக்கிறீர்களா? அப்படியானால், 11 மாத காலத்திற்குக் குத்தகைக்குக் கையெழுத்திடுமாறு உங்கள் வீட்டு உரிமையாளர் உங்களுக்கு அறிவுறுத்தியிருக்க வேண்டும். இந்தியாவில்,  லீஸ் அல்லது குத்தகை ஒப்பந்தங்கள் வழக்கமாகவே 11 மாதங்களுக்குத் தான் எடுக்கப்படுகிறது.  ஓரே வாடகையாளர் ஒப்பந்தம் வீட்டு உரிமையாளரிடம் பலமுறை புதுப்பிக்கப்பட்டாலும் 11 மாதத்திற்குத் தான் ஒப்பந்தம் கையெழுத்தாகும். ஏன் வாடகை ஒப்பந்தங்கள் 11 மாதங்களுக்கு மட்டும் செய்யப்படுகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? வாடகை ஒப்பந்தம்  வாடகை ஒப்பந்தம் என்பது நில உரிமையாளருக்கும் குத்தகைதாரருக்கும் இடையிலான சட்ட உறவின் எழுத்துப்பூர்வமான ஆவணமாகும். ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை இரு தரப்பினரும் பின்பற்ற வேண்டும் என்பதால் இத்தகைய ஒப்பந்தம் இரு தரப்புக்கும் சாதகமாக உள்ளது என நம்பப்படுகிறது. ஆனால்.. 11 மாத குத்தகை ஒப்பந்தம் உண்மையில்  இத்தகைய 11 மாத குத்தகை ஒப்பந்தம் குத்தகைதாரர்களைக் காட்டிலும் வீட்டின் உரி

வில்லங்கச் சான்றிதழ் மூலம் கண்டுபிடித்து விடலாம்

வில்லங்கச் சான்றிதழ் நாம்  வாங்கும் சொத்தின் அனைத்து விவரங்களையும் அதன் மூலப் பத்திரத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். சர்வே எண், விற்பவரும் வாங்குபவரும் செய்து கொண்ட ஒப்பந்தம், செய்து கொண்ட தேதி, பதிவு செய்யப்பட்ட தேதி, பதிவுத் தன்மை அதாவது Sale Deed, Mortgage Deed, Agreement போன்ற விவரம், சொத்தின் மதிப்பு, சொத்தை எழுதிக் கொடுப்பவர் மற்றும் எழுதி வாங்குபவர் பெயர், பதிவு செய்யப்பட்ட ஆண்டு மற்றும் பதிவு எண். அந்தச்  சொத்தை அடமானம் வைத்து ஏதேனும் கடன் வாங்கப் பட்டிருந்தாலும் அதுவும் தெரிந்துவிடும்.  சொத்தின்  பேரில் பவர் ஆஃப் அட்டர்னி எழுதிக் கொடுத்திருந்தாலும் வில்லங்கச் சான்றிதழ் மூலம் கண்டுபிடித்து விடலாம். சர்வே எண்,  விற்பவரும் வாங்குபவரும் செய்து கொண்ட ஒப்பந்தம், செய்துகொண்ட தேதி, பதிவு செய்யப்பட்ட தேதி, பதிவுத் தன்மை அதாவது Sale Deed, Mortgage Deed, Agreement போன்ற விவரம், சொத்தின் மதிப்பு, சொத்தை எழுதிக் கொடுப்பவர் மற்றும் எழுதி வாங்குபவர் பெயர், பதிவு செய்யப்பட்ட ஆண்டு மற்றும் பதிவு எண். அந்தச் சொத்தை அடமானம் வைத்து ஏதேனும் கடன் வாங்கப்பட்டிருந்தாலும் அதுவும் தெரிந்துவிடும். சொத

மனையின் உரிமையை நிலைநாட்டும் அரசாங்க பதிவேடுகள்

மனையின் உரிமையை நிலைநாட்டும் அரசாங்க பதிவேடுகள் சொ ந்த  வீட்டை கட்டியாக வேண்டும் என்ற லட்சிய கனவுடன் வீட்டுமனைகளை வாங்குவது அல்லது முதலீட்டு அடிப்படையில் வீட்டுமனை அல்லது மற்ற வகை நிலங்களை வாங்குவது என்ற இருவகையில் பெரும்பாலான நடுத்தர மக்களின் சொத்துக்கள் வாங்கப்படுகின்றன.  சொத்துக்கள் எந்த வகை நிலமாக இருந்தாலும் அதன் மூலப்பத்திரங்களின் அடிப்படையிலும், வில்லங்க சான்றிதழின் அடிப்படையிலும் அவற்றை வாங்குவது பொதுவாக தீர்மானிக்கப்படுகிறது. வாங்கப்படும்  சொத்து சார்பதிவாளர் அலுவலகத்தில் வாங்குபவர் மற்றும் விற்பவர் முன்னிலையில் இரண்டு சாட்சிகளுடன் பதிவு செய்யப்படுவது நடைமுறை. அத்துடன் சொத்து வாங்குவது பற்றிய விஷயம் முடிந்து விட்டதாகத்தான் பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள்.  வீட்டுமனையாக  இருந்தாலும் பிறவகை நிலமாக இருந்தாலும் அரசாங்கத்தில் அவை பற்றிய விபரங்கள் பலவையான பதிவேடுகளாக தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. அவற்றைப்பற்றி அறிந்து கொண்ட பிறகே ஒரு சொத்தை வாங்குவது எல்லா விதங்களிலும் பாதுகாப்பாக இருக்கும் என்பது நிபுணர்களது கருத்தாகும். அரசாங்கத்தால் பராமரிக்கப்படும் நிலம் சார்பான முக்கிய

கட்டிடங்களுக்கான திட்ட வரைபடம் எங்கு விண்ணப்பிக்க வேண்டும்

கட்டிடங்களுக்கான திட்ட வரைபடம் எங்கு விண்ணப்பிக்க வேண்டும் கட்டிடங்களுக்கான  திட்ட வரைபடம் வாங்குவதற்கு எங்கு விண்ணப்பிக்க வேண்டும் ? புதிதாக  கட்டப்படும் கட்டிடமாக இருந்தாலும் அல்லது ஏற்கனவே கட்டப்பட்ட கட்டிடங்களோடு சேர்த்து கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டாலும் அதற்கான திட்ட அனுமதி பெறுவது கட்டாயமானதாகும்.  இந்த  அனுமதியை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ) அல்லது நகர திட்ட இயக்ககம் (டி.டி.சி.பி) அமைப்புகளில் ஏதாவது ஒன்றிடமிருந்து பெற வேண்டும். அனுமதி கொடுக்கும் நடைமுறை அதாவது  லேஅவுட் சி.எம்.டி.ஏ.வால் வரையறுக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறை விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். இதை அதிகாரிகள் நேரடியாகவே விண்ணப்பித்தவரின் இடத்திற்கு வந்து ஆய்வு செய்வார்கள். திட்ட வரைபடமானது  விதிமுறைக்கு உட்பட்டு இருந்தால் மட்டுமே திட்ட அனுமதி வழங்கப்படும். அவ்வாறு இல்லையென்றால் சி.எம்.டி.ஏ அல்லது டி.டி.சி.பி அந்த திட்ட வரைபடத்திற்கு அனுமதி அளிக்காது. எங்கு விண்ணப்பிக்க வேண்டும்? சென்னையில்  வீடு அல்லது கட்டிடம் கட்டுபவர்கள் சி.எம்.டி.ஏ. அலுவலகத்தில் திட்ட அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். மற்ற நகரங

பத்திரம் என்றால் என்ன?

பத்திரம் என்றால் என்ன?  ஒரு பத்திரம்  என்பது ஒரு சட்டப்பூர்வ ஆவணம் ஆகும்,  இது அந்த நபர் குறிப்பிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்வதால், சொத்துக்கான சில உரிமைகளை வைத்திருப்பவருக்கு வழங்குகிறது. பொதுவாக,  சொத்து அல்லது வாகனத்தின் உரிமையை மற்றொரு நபருக்கு மாற்ற பத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. புரிந்துணர்வு பத்திரம்  ஒரு  பத்திரத்தின் நோக்கம் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு உரிமையை மாற்றுவதாகும்.  இந்த உரிமையானது ஒரு சொத்தாகவோ அல்லது சொத்தாகவோ இருக்கலாம். இந்த ஆவணத்தை நீதிமன்றத்தில் சாத்தியமானதாக மாற்ற, பத்திரத்தை அரசு அதிகாரி பொது பதிவேட்டில் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், பத்திரத்தின் கையொப்பம் அங்கீகரிக்கப்பட வேண்டும் மேலும் சட்டத்தின் அடிப்படையில் சாட்சிகளும் தேவைப்படலாம். பத்திரம் எழுதப்பட்ட வடிவத்தில் இல்லாவிட்டால் அல்லது அங்கீகரிக்கப்பட்டு பொதுப் பதிவேடுகளில் குறிப்பிடப்படாவிடில், அதை முழுமையற்ற செயல் என்று அழைக்கலாம். ஒப்பந்தம் மற்றும் ஒப்பந்தம்: வேறுபாடு  ஒப்பந்தச் சட்டத்தின்  அடிப்படைகள் சட்டப்பூர்வமாகக் கடமையாக்கக் கூடிய அத்தகைய ஒப்பந்தத்தை முன்மொழிந்து ஏற்றுக் கொள்கின்றன. கருத்

வாடகைதாரருக்கும் வீட்டு உரிமையாளருக்கும் ஒப்பந்தம் அவசியமா?

வாடகைதாரருக்கும் வீட்டு உரிமையாளருக்கும் ஒப்பந்தம் அவசியமா? சென்னையில்  மற்ற நகரங்களைவிட வாடகைதாரர்கள் அநேகர் இருப்பார்கள். அதுபோல மற்ற நகரங்களைக் காட்டிலும் சென்னையில்தான் வீட்டு வாடகையும் கூடுதல். அதுபோல வாடகை வீட்டுப் பிரச்சினைகளும் சென்னையில்தான் அதிகம்.  அடிப்படை  வசதிகள் கூட இல்லாது நான்கு சுவர்களை மறித்து வீடு என்று சொல்லும் அவலம் சென்னையில் நடக்கிறது. இவை அல்லாது பராமரிப்புச் செலவு என்ற பெயரில் கூடுதலான தொகையும் வசூலிக்கப்படுகிறது. தனி மின் இணைப்பு இல்லாத வீடுகளில் மின் கட்டணம் மிக அதிகமாக வசூலிக்கப்படுகிறது. இது  போன்று வாடகைதாரருக்கும் வீட்டு உரிமையாளருக்கும் இடையிலான முரண்பாடுகள் மிக அதிகம்.  இதற்கு முக்கியமான காரணம் சட்ட ரீதியிலான தெளிவு இல்லாதது. வாடகைதாரர்  வீட்டு உரிமையாளார் முரண்பாட்டைத் தவிர்க்க ஒப்பந்தப் பத்திரம் எழுதிக்கொள்வது அவசியம். ஏனெனில் அதிலேயே பல முரண்பாடுகள் தீர்க்கப்படும். அதாவது வாடகை, பராமரிப்புத் தொகை, கரண்ட் பில், ஒயிட் வாஷ், அட்வான்ஸ் ஆகியவை அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். முரண்பாடு ஏற்படும்போது அட்வான்ஸ் தொகையை இருவரும் மாற்றிச் சொல்லக்கூடும். மேலும்

சொத்து பத்திரம் எழுதுவதில் கூடுதல் கவனம் அவசியம்

சொத்து பத்திரம் எழுதுவதில் கூடுதல் கவனம் அவசியம் அசையா சொத்துக்கள் வாங்குவதற்கான பத்திரம் எழுதுவதில் பல்வேறு கூடுதல் விஷயங்களையும் கவனிக்க வேண்டும். வீடு, மனை வாங்குவோர் அதற்கான கிரைய பத்திரத்தை எழுதுவதில் பொது விஷயத்தில் மட்டுமே பலரும் கவனம் செலுத்துகிறோம்.  சொத்துக்கள் விற்பனை பத்திரத்தில் விற்பவர், வாங்குபவர், பெயர், முகவரி, சொத்தின் சர்வே எண், பரப்பளவு, வகை, நான்கு எல்லை போன்ற தகவல்கள் இருந்தால் போதும் என நினைப்பது தவறு. ஆனால், இது போதுமானதல்ல. சொத்து எந்த நிலையில் உள்ளது, காலி நிலமா, தோட்டமா, வீடு, கிணறு, ஆழ்குழாய் உள்ளதா என பல விஷயங்களை கவனிக்க வேண்டும். இது போன்ற  தகவல்களை பத்திரத்தில் அவசியம் குறிப்பிட வேண்டும். நிலம், வீட்டின் மதிப்பை மட்டும் குறிப்பிட்டால் போதும் என நினைக்கலாம். ஒரு சொத்தை, நிலம், வீடு ஆகியவற்றுடன் மட்டுமே வரையறுக்க முடியாது. அதில் உள்ள பொருட்களையும் சேர்த்து தான் மதிப்பு தீர்மானிக்க வேண்டும்.  இது போன்ற முக்கிய தகவல்களை குறிப்பிடவில்லை என்றால் விற்பனை முடிந்த பின் மனையில் உள்ள வீட்டுக்கு விற்றவர் உரிமை கோரினால் சிக்கல் ஏற்படும். நீங்கள் வாங்கும் நிலத்தில் என

சென்னையில் சொத்து வாங்குகிறீர்களா? சரிபார்க்க வேண்டிய ஆவணங்கள் என்ன?

சொத்து வாங்கும் முன் எந்தந்த ஆவணங்களை சரி பார்க்க வேண்டும்? தாய் பத்திரம் மற்றும் விற்பனை பத்திரம் சொத்து  உரிமையாளரின் விவரங்கள் அனைத்தும் தாய் பத்திரத்தில் இருக்கும். முதல் உரிமையாளார் முதல் தற்போதைய உரிமையாளர் வரை முழு விவரமும் இதில் இருக்கும். இரு  தரப்பினரின் சம்மதத்துடன், சொத்தின் உரிமை விற்பனை பத்திரம் மூலம் மாற்றப்படும். இது துணை பதிவாளரின் அலுவலகத்தில் பதிவு செய்யப்படும். விற்பனையாளரிடமிருந்து வாங்குபவருக்கு தலைப்பு, உரிமைகள் மற்றும் சொத்தின் உரிமையை மாற்றுவதை பதிவு செய்யும் சட்ட ஆவணமாகும். ஆவணங்கள்  தொலைந்து போகும் சந்தர்ப்பங்களில், வாங்குபவர் விற்பனையாளரிடம் உள்ள முந்தைய ஆவணத்திலிருந்து உரிமை குறித்த விவரங்களை கண்டறிய முடியும். வழக்கறிஞரின் உதவியுடன் ஆவணத்தை சரிபர்ர்த்து வில்லங்கம் ஏதுமில்லை என தெரிந்து கொள்ள முடியும். முந்தைய  ஆவணத்தை நீதிமன்றம் அல்லது அரசு அல்லது அங்கீகரிக்கும் நிறுவனம், சொத்தின் உரிமைகளை அதன் முதல் உரிமையாளருக்கு வெளிப்படையாக மாற்றியுள்ளதை அங்கீகரித்திருக்க வேண்டும்.  பின்னர்,  தற்போதைய உரிமையாளர், அதாவது விற்பனையாளர் வரை சட்டரீதியான செயல்களின் தொடர்ச்சிய

புலன் எண் என்றால் என்ன

புலன் எண் என்றால் என்ன  புலன் எண் என்பது ஆங்கிலத்தில் சர்வே நம்பர் என கூறுவர். அதாவது மொத்த நிலங்கள் பிரிக்கப்பட்டு எண்கள் தருவர். அத்தகைய எண்கள் தான் புல எண்கள் எனப்படும்.  இந்த  புல எண் எதற்காக பயன்படுகிறது என்று கேட்டால் புல எண்ணை வைத்து தான் அந்த நிலம் எங்கு அமைந்து இருக்கிறது என்பதை மிகவும் துல்லியமாக காட்டும்.  இந்த புல எண்கள் பட்டா விவரத்தை காண உதவும்.  மேலும்  இந்த எண்கள் நிலத்தின் தன்மை பரிவர்த்தனை செய்தல் போன்றவைகளுக்கு உபயோகமாக இருக்கும். ஒவ்வொரு நிலத்திற்கும் தனி தனியான எண்கள் இருக்கும்.  உதாரணமாக  ஒரு நிலம் உங்கள் ஊரில் ஏதோ ஒரு மூலையில் இருக்கிறது என்று வைத்து கொள்வோம். அதற்கான சர்வே எண் 12 என்று குறிப்பிட்டிருக்கும்.  பிறகு  அதன் உட்பிரிவு எண்ணும் சேர்ந்து காட்டும்.  மேலும் நாம் அருகில் உள்ள நிலங்களை கூட இந்த புல எண் கொண்டு அறிந்து  கொள்ள முடியும். ஒருவேளை பாகப்பிரிவினை செய்து இருந்தால் புல எண் மற்றும் அதோடு A, B என அந்த சர்வே நம்பர் இல் காட்டி விடும்.

பிழைத்திருத்தல் பத்திரம்

பிழைத்திருத்தல் பத்திரம்  பிழைத்திருத்தம் என்பது இயல்பான ஒன்றுதான். ஆனால் பத்திரங்களில் நாம் அப்படி செய்வது நமக்கே எதிர்காலத்தில் பிரச்சினைகள் வரக் கூடும். அதனால் இனிமேல் எழுதப் போகும் நபர் யாராக இருந்தாலும் பத்திரங்களை மிகவும் கவனத்தோடு எழுதுதல் அவசியம்.  பிழை திருத்தல் பத்திரம்  பத்திரத்தில்  பிழை திருத்தம் இருந்தால் அதனை மாற்றுவதற்கு எளிய வழிகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை காண்போம். பத்திரங்கள் எழுதுதலில் பிழை இருப்பின் அவை பிழைத்திருத்தம் எனப்படும்.  இவற்றில் இரண்டு வகையான பிழை பத்திரங்கள்  உள்ளது. ஒன்று சாதாரண பிழை மற்றொன்று உரிமை மற்றும் பத்திரம் ஆகும். பிழைத்திருத்தல் பத்திரம் திசைகள், எல்லைகள், பெயர், Initial, முகவரி, FMB மற்றும் இதர திருத்தங்கள் இருந்தால் அது சாதாரண பிழை திருத்தம் ஆகும்.  இதனை  மனை அல்லது நிலம் விற்ற நபர்கள் சரி செய்து தர வேண்டும். அதற்கான முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவு செலவு ஏதும் நாம் கட்ட தேவையில்லை. மேலும் ஏதாவது அடித்தல் திருத்தல் இருந்தால் அங்கு விற்ற நபரும் வாங்கும் நபரும் கையொப்பம் கட்டாயம் இடுதல் வேண்டும். ஒருவேளை நீங்கள் தவறாக எழுதுவது தெரிந்தால்

ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதன் நன்மைகள் 1.

ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதன் நன்மைகள்  1. நிலையான  வருமானம் நீங்கள் ஒரு சொத்தை வாங்கி வாடகைக்கு விட்டால், அது உங்களுக்கு வழக்கமான வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. பொதுவாக, நில உரிமையாளர்கள் தூங்கும்போது சம்பாதிப்பார்கள்' என்று கூறப்படுவது, நூறு சதவீதம் உண்மை. எதுவும் செய்யாமல், நிலையான வருமானம் பெறலாம். இருப்பினும், இந்த வருமானம் ரியல் எஸ்டேட் வகை, அதன் இடம், அளவு போன்றவற்றைப் பொறுத்தது.  . 2. காலப்போக்கில்  பாராட்டுகிறது காலப்போக்கில் மட்டுமே பாராட்டக்கூடிய சில சொத்து வகுப்புகள் மட்டுமே உள்ளன. தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற இரண்டு சொத்துக்கள். எதுவாக இருந்தாலும், சில விதிவிலக்கான சூழ்நிலைகளைத் தவிர, எதிர்காலத்தில் ரியல் எஸ்டேட் விலைகள் கண்டிப்பாக அதிகரிக்கும். இன்று ஒரு சொத்தை வாங்கி இரண்டு வருடங்கள் கழித்து விற்றால் அதற்கு ஈடாக அதிக தொகை நிச்சயம் கிடைக்கும்  3. காலப்போக்கில்  வருமானம் அதிகரிப்பு இது ரியல் எஸ்டேட்டின் மதிப்பு மட்டுமல்ல, அதன் மூலம் கிடைக்கும் வருமானமும் காலப்போக்கில் அதிகரிக்கிறது. இதன் பொருள் உங்கள் சொத்துக்கான வாடகையில் நிலையான உயர்வு உள்ளது. இந்த

செல்லாத உயில் - போலி உயில்

செல்லாத உயில் - போலி உயில் செல்லாத  உயில் எது,  போலி உயில், உயில் நீதிமன்ற தீர்ப்பு,  பூர்வீக சொத்து மீது உயில் எழுதுவது,  பொதுவாக இந்த மாதிரியான பிரச்சினைகள் future-ல் வரக் கூடும். அப்பொழுது நாம் யோசனை செய்து பலனில்லை.  எனவே உயில் எழுதும்போது மிகவும் கவனமாக இருத்தல் நல்லது.  ஒருவேளை  உங்கள் அப்பா உங்கள் பெயரில் உயிலை எழுதி வைத்தார் என்றே வைத்து கொள்வோம். ஆனால் அது செல்லவில்லை என்று கூறுகின்றார்கள். எந்த மாதிரியான பிரச்சினைகள் பொதுவாக வரக் கூடும்.  ஒருவர்  உயில் தன் வாழ்நாளில் எத்தனை உயில் வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் எல்லா உயிலும் செல்லாது. கடைசியாக எழுதிய உயில்  தான் செல்லுபடியாகும்.  உயில் என்றால் என்ன  முக்கியமாக  இரண்டு சாட்சிகள் தான் ரொம்ப முக்கியம். ஏனென்றால் அவர்கள் தான் ரொம்ப important. மேலும்  உயில் எந்த வித அடித்தல் திருத்தல்  மற்றும் மனக் கோளாறுகள் இருந்தால் உயில் எழுதக் கூடாது

கூட்டு உயில்

கூட்டு உயில்  பொதுவாக ஒரு குடும்பத்தில் பிரச்சினை வருவது என்றால் சொத்து அல்லது பணம் மட்டுமே.  அதனால் தான் அனைத்து வீட்டிலும் உயில் எழுதுவது கட்டாயமானது.  உயிலில் பல ரகங்கள் உள்ளது.  நாம் தற்போது கூட்டு உயிலை பார்ப்போம்.  கூட்டு உயில் என்பது ஒருவர் சம்பந்தப்பட்டது இல்லை.  இது ஒருவர் மற்றும் அதற்கு மேலாக ஒன்று கூடி சேர்ந்து எழுதுவது ஆகும். இதனைத் தான்  கூட்டு உயில் என்பார்கள். கூட்டு உயில் இதை நாம் ஒரு நல்ல வக்கீலே கொண்டு எழுதுவது நல்லது ஆகும். பிறகு அதனை நாம் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு அனைவரும் கையொப்பம் இட வேண்டும்

பதிவு செய்யப்பட்ட உயில்

பதிவு செய்யப்பட்ட உயில்  உயில் என்பது நம் வாழ்வின் முக்கிய அங்கமாக திகழ்கிறது என்று சொன்னால் அது சரியே. இன்றைய சூழ்நிலையில் யார் எப்படி மாறுகிறார்களோ தெரியவில்லை. அதற்காக தான் அன்றைய காலத்தில் இருந்து இன்றைய காலம் வரை உயில் எழுதுவது கட்டாயமாக்கப் படுகிறது.  உயில் எழுதும்போது கண்டிப்பாக சாட்சிகள் இருக்க வேண்டும். அதுவும் இரண்டு அல்லது மூன்று சாட்சிகள்  கட்டாயமாக இருத்தல் அவசியம். அதில் நீங்க ஒருவராக இருக்க கூடாது. அதுவும் இல்லாமல் அவர்கள் உங்களை விட வயது மிக குறைவாக இருந்தால் நல்லது.  1. உயிலை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.  2. அது உங்கள் விருப்பம்.  3. உயில் பதிவு செய்தால் நமக்கு நன்மையே.  4. பதிவு செய்ய நீங்கள் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று அவர்கள் சொல்லும் விவரங்கள் அனைத்தும் தர வேண்டும்.  5. உயில் பத்திரம் மிகவும் பாதுகாப்பாக இருக்கும். பதிவு செய்யப்பட்ட உயில் உயிலை எழுதி முடித்த பின்னர் நீங்கள் அதனை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.  எழுதிய உயிலை நீங்கள் சார் பதிவாளர் அலுவலகம் சென்று பதிவிடுங்கள். பிறகு அதில் ஒரு ஜெராக்ஸ் எடுத்து அங்கேயே கொடுத்து விடுங்கள்.இதற்காக நா

தனியார் நில ஆக்கிரமிப்பு சட்டம்

தனியார் நில ஆக்கிரமிப்பு சட்டம்  தனியாக  ஒரு நிலம் இருந்தால் அரசு அந்த நிலத்தை எப்போது வேண்டுமானாலும் ஆக்கிரமிப்பு செய்யலாம் என்று உச்ச வரம்பு சட்ட திருத்தம் உள்ளது. ஆனால் தனியாக ஒருவர் மற்றொருவர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய முடியாது.  தனியார் நில ஆக்கிரமிப்பு சட்டம் அரசாங்கம் நிலம் - தனியார் நிலம் 1. ஒருவர் சொந்தமாக நிலம் வைத்திருந்தார் என்று வைத்து கொள்வோம். அதை திடீர் என்று அரசு அந்த நில உரிமை சொந்தக்காரருக்கு நோட்டிஸ் அனுப்பாமல் அந்த நிலத்தை எடுத்து கொள்ளலாம்.  2. இதனைத் தான் 1971 பிரிவு 20 ஊரமைப்பு சட்டம் சொல்கிறது.  3. முன்பு  எல்லாம் அரசு ஒரு தனியார் நிலங்களை எடுத்து கொள்வதற்கு முன் நில உரிமையாளரிடம் ஆலோசித்து பின்னர் அதனை நிறுவுவர்.  4. 1971  சட்ட திருத்தத்தின் படி, அரசு ஒரு சமுதாய பயன்பாட்டிற்காக செய்யும் விஷயங்களுக்கு நிலம் தேவைப்பட்டால் கண்டிப்பாக எடுத்து கொள்ளும்.  5. முதலில்  அரசு அந்த ஊரில் அரசு புறம்போக்கு நிலங்களை ஆராயும். எதுவும் இல்லாத பட்சத்தில் தனியாருக்கு சொந்தமான நிலங்களை சமுதாய பயன்பாட்டிற்காக உபயோகப்படுத்தும்.  6. இதற்காக  அரசு சார்பில் இழப்பீடுகளை அந்த நில உரிமை

பாட்டி சொத்து யாருக்கு சொந்தம்

பாட்டி சொத்து யாருக்கு சொந்தம் பாட்டி சொத்தை யார் யார் அனுபவிப்பது மற்றும் மகன், மகள், பேரன், பேத்திகளுக்கு யாருக்கு போய் சேரும் அந்த சொத்து என்பதை இங்கே காண்போம்.  பொதுவாக சொத்து என்பது பூர்வீகமாகவும் அல்லது தான் சேர்த்து வைத்த சொத்தாகவும் இருக்கும்.  அதனை உரிமை கொண்டாட அல்லது அனுபவிக்க யார் யார் வருவது என்ற குழப்பம் அனைவர் மனதிலும் இருக்கும்.  பாட்டி  சொத்து யாருக்கு சொந்தம்  1. பாட்டி இல்லை எனில் தாத்தாவிற்கு செல்லும்.  2. பாட்டிக்கு ஒரு மகன் மட்டுமே எனில் அந்த சொத்து அந்த மகனுக்கு போகும்.  3. பாட்டிக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் என்றால் இரண்டு பேருக்குமே பாகப்பிரிவினை மூலம் சம பாகங்களாக போகும்.  4. பாட்டிக்கு மகன் இல்லை இரண்டு பேரன்களோ அல்லது இரண்டு பேத்திகளோ இருக்கும் பட்சத்தில் அவ்விருவருக்குமே அந்த சொத்து போகும்.  5. பாட்டிக்கு  இரண்டு மகன்களின் ஒருவர் மட்டும் இருக்கிறார் மற்றும் இன்னொரு மகனின் மகள் அல்லது மகன் இருக்கும் பட்சத்தில் இருவருக்குமே சம பாகங்களாக செல்லும். இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறைகள் பாட்டி சொத்தை அனுபவிக்கும் உரிமை உள்ளது என்று சட்டம் சொல்கிறது.  மேலும்

உயில் பதிவு செய்வது எப்படி

உயில் பதிவு செய்வது எப்படி  உயில் எழுதுபவர்கள் துணை பதிவாளரிடம் சென்று பதிவிட வேண்டும்.  அல்லது உங்கள் வக்கீல் கொண்டு பாருங்கள். அதற்கான விளக்கத்தினை அவரே சொல்வார்.  மேலும் நாம் முன்பு சொன்னதை போல் தான் அந்த இரண்டு சாட்சிகள் வேண்டும். அதை பரிசீலனை செய்து விட்டு உங்கள் உயிலை பதிவு செய்வார்கள்.  உயில் நகல் பெறுவது எப்படி  உயில் நகலை பெறுவது ரொம்ப கஷ்டம். ஏனென்றால் உயில் ஆனது உயில் எழுதுபவர் மற்றும் அதனை எழுத சொல்பவர்க்கே அதன் உரிமை.  மேலும் அவர் இல்லாவிட்டால் அது யார் பெயரில் இருக்குமோ அவரே அதற்கு சொந்தக்காரர் ஆவர். இருந்தாலும் உயில் பத்திரம் நகல் பெறுவது கடினம்.  உயில் பதிவு செய்வது எப்படி  உயிலை பத்திரத்தில் தான் எழுத வேண்டும் என்று கட்டாயமில்லை. நீங்கள் வெறும் பேப்பர் மற்றும் காகிதத்தில் கூட எழுதி கொடுக்கலாம். மேலும் உங்களுக்கு எதாவது சந்தேகங்கள் இருப்பின் உங்கள் வக்கீலை நாடுங்கள்.

கடன் பத்திரம் மாதிரி

கடன் பத்திரம் மாதிரி  அடமான உறுதிமொழி எழுதும் முறை - ஈட்டு கடன் பத்திரம் என்பது ஒருவர் பிறரிடம் இருந்து கடனாக பணம் வாங்குவது ஆகும். அதற்கு கடன் கொடுத்தவர்கள் கடன் பத்திரத்தை எழுதி வாங்குவார்கள்.  பெரும்பாலும் பாண்ட் இல் எழுதி வாங்குவார்கள். அதன் விலை 20 ரூபாய் மட்டுமே. அதை வைத்து நாம் எதுமே செய்ய முடியாது என்று தான் கூற வேண்டும்.  ஏனென்றால் அது எப்பொழுது வாங்கினார். அதை எப்பொழுது கொடுத்தார் என்று நாம் எழுத்து பூர்விகமாக மாற்றி கொள்ளலாம்.  கீழ்கண்ட விவிவரங்களை இங்கே சரி பார்க்க இயலும்.  அதாவது கடன் வாங்கியவர்கள் மற்றும் கடன் கொடுத்தவர்கள் தங்களுக்கு இது சரியா அல்லது அது சரியா என்று தீர்மானித்து ஒப்பம் இட்டு உறுதி படுத்துதல் ஆகும்.  ஈட்டு கடன் பத்திரம் ஈட்டு கடன்  என்பது நாம் அதாவது கடன் வாங்குவோருக்கு சாதகமாக அமைவதில்லை. கடன் பணம் தருவோருக்கு மிகவும் சாதகமாக இருக்கும் என்று தான் கூற வேண்டும். மேலும் கடன் கொடுத்தவர்கள் எளிதாக  வக்கீல் நோட்டீஸ் அனுப்புவார்கள். உங்களிடம் சொல்லாமல் வக்கீல் நோட்டீஸ்  கூட அவர்கள் அனுப்பலாம். மேலும் உங்கள் சொத்தை எளிதாக கூட அவர்கள் பதிவு செய்யலாம். ரொம்ப  எளித

வாரிசு இல்லாத சொத்து யாருக்கு?

வாரிசு இல்லாத சொத்து யாருக்கு? இந்த கேள்விகள் அனைவரும் மனதிலும் தோன்றும். அதற்கான சரியான விளக்கம் வீட்டில் கணவன் மனைவி இருவரும் இல்லை என்றால் அந்த சொத்தானது யாருக்கு போகும் என்பது தான் கேள்வி.  அவர்களுக்கு வாரிசு அதாவது மகன்கள் மற்றும் மகள்கள் யாருமே இல்லாத பட்சத்தில் இரண்டாம் நிலை வாரிசுகள் அந்த சொத்துக்களை பெறலாம்.  இரண்டாம் நிலை வாரிசு என்றால் என்ன? கணவர் கூடப் பிறந்த சகோதரன் அல்லது சகோதரி மற்றும் மனைவியின் சகோதரர் அல்லது சகோதரி இருப்பின் அவர்கள் தான் இரண்டாம் நிலை வாரிசு என்பர். பொதுவாக எல்லா வீடுகளிலும் இருக்கும் பிரச்சினை சொத்து மற்றும் பணம்தான்.  அது மட்டுமில்லாமல் வாரிசு இல்லை என்றால் அந்த சொத்து யாருக்கு போகும் என்ற கேள்வி நம் மனதில் எழும்.  அப்பா அம்மா இருவருக்குமே மகன்கள் பிறக்கவில்லை என்றால் அந்த சொத்து யாருக்கும் போகும் என்ற கேள்வி நிறைய உள்ளது. தனது அப்பாவால் சொத்தை அனுபவிக்க முடியவில்லையென்றால் அவருடைய மனைவி பெயரிலும் அல்லது மகள்கள் பேரிலோ கூட எழுதலாம்.

செட்டில்மெண்ட் பத்திரம் ரத்து செய்ய முடியுமா?

செட்டில்மெண்ட் பத்திரம் ரத்து செய்ய முடியுமா? உங்கள் தாய்  அல்லது தந்தை அல்லது வேறு ஒருவர் உங்களுக்கு கொடுத்த  தான செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்ய முடியாது. இது போன்ற வழக்குகள் தான் நீதிமன்றத்தில் குவிந்த வண்ணம் உள்ளது.  ஏனென்றால் அந்த தான செட்டில்மெண்ட் பத்திரத்தில் தான் பிரச்சினை அதிகம் ஏற்படுகிறது. தானமாக எப்போது கொடுக்கப்பட்டதோ அப்போதே அதனை திரும்பவும் மற்றும் ரத்து செய்ய ஆகாது.  மேலும்  தானம் குடுக்கும் நபர் சுவாதீனம் (அந்த இடம் அல்லது நிலம் அவனுக்கு சொந்தமானது என்று பொருள்) சேர்த்து  உங்களிடம் ஒப்படைக்க வேண்டும். மற்றும் பட்டா உங்கள் பெயருக்கு மாற்றம் செய்து இருத்தல் அவசியம். அவ்வாறு சுவாதீனம் மற்றும் பட்டா மாற்றம் செய்யாமல் இருப்பது தான செட்டில்மெண்ட் பத்திரத்துக்கு மிகவும் ஆபத்து ஆகும்.  தானம் செய்பவர் சில பல நிபந்தங்களுடன் மற்றும் விதிமுறைகளுடன் உங்களுக்கு கொடுத்தார் என்றால் அத்தகைய நிபந்தனை மற்றும் விதிமுறைகள் கட்டாயம்  பின்பற்ற வேண்டும்.  இல்லையென்றால் அதுவும் ஒரு பிரச்சினையே.  தானம் என்பது தனது சொந்த ரத்தத்தில் கொடுப்பது ஆகும். மூன்றாவது நபருக்கும் அவர்கள் கொடுக்கும்

செட்டில்மெண்ட் என்றால் என்ன?

செட்டில்மெண்ட் என்றால் என்ன? செட்டில்மெண்ட் பத்திரம் தனது குடும்பத்தில் உள்ள சொத்தை தானமாக அதாவது பரிசாக கொடுப்பது செட்டில்மெண்ட் எனப்படும்.  தான் உயிருடன் இருக்கும்போதே சொத்தை தனது குடும்ப உறுப்பினர்களுக்கு யாருக்காவது சுய நினைவோடு எழுதி தருவதாகும்.  அவ்வாறு தானமாக கொடுக்கும் செட்டில்மெண்ட பத்திரத்தை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது.  இது போன்ற வழக்குகள் ஏராளமாக குவிந்து உள்ளது. ஆனால் ரத்து செய்யும் பத்திரமும் விற்ற சொத்தையும் திரும்ப கண்டிப்பாக வாங்க முடியாது.  செட்டில்மெண்ட் என்றால் என்ன?  எதற்காக ஒரு சில நபர்கள் கொடுத்த தான பத்திரத்தை திரும்ப பெறுகிறார்கள் என்றால் சொத்தை பெற்ற நபர் தேவை இல்லாத செயலில் தங்கள் அனுமதி இன்றி செய்தால் திரும்ப பெற வழக்கு தொடுவார்கள்.  அதற்கு முன்னரே சொத்தை தானமாக விற்கும் நபர் சில பல கண்டிஷன் போட்டு பத்திரத்தை எழுத வேண்டும். அதில் சொத்தை விற்கும் நபர் என்ன வேண்டுமானாலும் கண்டிஷன்ஸ் அப்ளை செய்யலாம்.  தானம் கொடுப்பவர் கவனிக்க வேண்டியவை செட்டில்மெண்ட் பத்திரம் தானமாக வழங்கும் நபர் தனது சுய சம்பாதித்த சொத்தை மட்டும் தான் எழுத முடியும். பூர்வீக சொத்தை தானமாக எ

ஓசூரில் நிலத்தை வாங்கி குவிக்கும் தமிழ்நாடு அரசு.. அடுத்த சென்னை ஓசூர்-தானா..!!

ஓசூரில் நிலத்தை வாங்கி குவிக்கும் தமிழ்நாடு அரசு.. அடுத்த சென்னை ஓசூர்-தானா..!! தமிழ்நாட்டில் புதிதாகத் தொழில் துவங்க வேண்டும் எனத் திட்டமிடும் அனைத்து பெருநிறுவனங்களுக்குத் தற்போது ஓசூர் விருப்பமான இடமாக மாறியுள்ளது.  கடந்த 2 வருடத்தில் டாடா மற்றும் ஓலா ஆகிய இரு பெரிய நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலையை  ஓசூரில் அமைத்துள்ளது.  இதைத் தொடர்ந்து சிறிதும் பெரிதுமாகப் பல நிறுவனங்கள் ஓசூரைத் தேர்வு செய்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு ஓசூரில்  வர்த்தக வளர்ச்சிக்காகவும், புதிய நிறுவனங்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவும்  சுமார் 4000 ஏக்கர் நிலத்தை வாங்க முடிவு செய்து அதற்கான பணிகளை வேக வேகமாகச் செய்து வருகிறது. 4000  ஏக்கர் நிலம் ஓசூரில்  இதுவரை தமிழ்நாடு அரசு சுமார் 1000 ஏக்கர் நிலத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், மீதமுள்ள 3000 ஏக்கர் நிலத்தைக் கைப்பற்றும் பணிகளைச் செய்து வருகிறது.  முதலீட்டாளர்களைத் தொழில் துவங்க அழைக்கும் போது அரசிடம் போதுமான நில இருப்பு இருந்தால் மட்டுமே முதலீட்டை விரைவாக ஈர்க்க முடியும். சவால்கள்   ஆனால் நில உரிமையாளர்களிடம் இருந்து நிலத்தை வாங்குவது என்பது சாதாரணக் காரிய

நிலத்தை அளக்கின்ற அளவீடுகள்!

  நிலத்தை அளக்கின்ற அளவீடுகள்! ஒவ்வொரு  பகுதிகளில் ஒவ்வொரு அளவீட்டு முறைகள் பயன்படுத்தப் படுகின்றன.  அவற்றை நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டும்.  தமிழ்நாட்டில் 3 அளவீட்டு முறைகள் பயன்படுத்தப் படுகின்றது. 1. பாரம்பரிய  நாட்டு வழக்கு அளவீடுகள் : குழி, மா, வேலி, காணி, மரக்கா, 2. பிரிட்டிஷ்  வழக்கு அளவீடுகள் : சதுரஅடி, சென்ட், ஏக்கர், போன்றவை 3. மெட்ரிக்  வழக்கு அளவுகள் : ச.மீட்டர், ஏர்ஸ், ஹெக்டேர்ஸ் ஆனால்  எல்லா பட்டா ஆவணங்களும் மெட்ரிக் அளவுமுறைகளில் ஏர்ஸ், ஹெக்டேரில் தான் இருக்கின்றன. நில அளவீடுகள்:- ************************ 1 சென்ட்      – 40.47 சதுர மீட்ட‍ர் 1 ஏக்க‍ர்       – 43,560 சதுர அடி 1 ஏக்க‍ர்       – 40.47 ஏர்ஸ் 1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்ட‍ர் 1 சென்ட்      – 435.6 சதுர அடி 1 ஏர்ஸ்    – 100 சதுர மீட்ட‍ர் 1 குழி           – 144 சதுர அடி 1 சென்ட்      – 3 குழி 3 மா              – 1 ஏக்க‍ர் 3 குழி           – 435.6 சதுர அடி 1 மா              – 100 குழி 1 ஏக்க‍ர்       – 18 கிரவுண்டு 1 கிரவுண்டு – 2,400 சதுர அடிகள் ஏக்கர் 1 ஏக்கர் – 100 சென்ட் 1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர் 1 ஏக்க