Posts

Showing posts from July, 2023

பவர் பத்திரம் ரத்து செய்வது எப்படி

பவர் பத்திரம் ரத்து செய்வது எப்படி  பவர் பத்திரம் எழுதி கொடுத்த முதன்மையாளர் கண்டிப்பாக அதனை எந்த நேரத்திலும் ரத்து செய்யும் உரிமை உள்ளது. அதனை முதன்மையாளர் என்றும் முகவர் என்றும் நாம் கூறுவோம்.  பவர் பத்திரம் ரத்து செய்வது எப்படி? 1. சொத்தின்  உரிமையாளர் - முதன்மையாளர் 2. அதிகாரம் கொடுக்கும் நபர் - முகவர் முதன்மையாளர் தன்னால் செயல்படுத்த முடியாத சரியாக maintain பண்ண முடியாத சொத்தை அதிகாரம் என்ற பெயரில் எழுதி கொடுப்பது பவர் பத்திரம் எனலாம்.  இதில்  முதன்மையாளர் எந்தெந்த அதிகாரம் இருக்கிறது என்று பத்திரத்தில் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.  நமது நிலத்தை யாராவது ஆக்கிரமிப்பு செய்ய நேர்ந்தால் அப்போது இந்த பவர் பத்திரம் உபயோகமாகும்.  அதற்காக தான் அதிகபட்ச அளவில் பவர் பத்திரம் போடுகின்றனர்.  2. பவர் பத்திரம் மாதிரி இவை எல்லாம் தேவை இல்லை. மற்ற கிரைய பத்திரம் போல் தான் இதையும் எழுத வேண்டும். உங்களுக்கு தெரியாமல் முகவர்  உங்கள் நிலத்தை யாருக்குக்காவது கிரையம் செய்து இருந்தால் அல்லது கிரையம் செய்ய ரெடி ஆக இருந்தால்  அந்த பவர் பத்திரத்தை நீங்கள்  எளிதாக ரத்து செய்யலாம். முக்கியமாக பவர் பத்திரத

ஜெனரல் பவர் பத்திரம்

ஜெனரல் பவர் பத்திரம்  பவர்  பத்திரத்தில் இந்த பத்திரம் ஒரு வகை ஆகும். அதாவது ஒரு ஏஜென்ட்-க்கு கொடுக்கும் அதிகாரம் ஆகும். அந்த வகையில் கொடுக்கும் பவர் பத்திரம் வாங்கும்போது யோசித்து மற்றும் விசாரித்து வாங்க வேண்டும். அவ்வாறு சரியாக அந்த பவர் பத்திரம் நாம் வாங்கும் போது எதிர்பாராத விதமாய் அதனை ரத்து செய்தால் வாங்கிவருக்கு மிகப்பெரிய  நஷ்டம் ஆகும்.  ஜெனரல் பவர் பத்திரம்  இப்பொது ஒருவர் நிலம் வாங்குகிறார் என்று வைத்து கொள்வோம். அதன் பத்திரம் Power Of Attorney யை சேர்ந்தது என்று அந்த பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது நமக்கு தெரிய வரும் போது முதல்வரின் லைப் சான்றிதழும் மற்றும் அவரின் ஒப்புதலும் நிலம் வாங்குபவர் வாங்க வேண்டும். முகவருக்கு விற்பனை அதிகாரம் இருந்தாலும் முதல்வர் தான் அதற்கு முதலாளி என்பதால் அவரின் ஒப்புதல் மிகவும் முக்கியம்.  ஜெனரல் பத்திரம் முழு அதிகாரம் பெற கூடிய  ஆவணம் ஆகும். ஆனால் இதனை தவறாக சில பவர் ஏஜெண்டுகள் முதல்வருக்கு தெரியாமல் விற்பனை செய்து விடுகின்றனர். அவ்வாறு விற்பனைக்கு வாங்கும் நபர் ஏமாந்து தான் போவார்கள். ஏனென்றால் அந்த பவர் பத்திரத்தை அவர் எப்போது வேண

பாகப் பிரிவினையை பதியாவிட்டால் பிரச்சினை வரும்

பாகப் பிரிவினையை பதியாவிட்டால் பிரச்சினை வரும். சொந்தங்களுக்குள்  பாகப் பிரிவினை நடந்தாலும் பதிவு செய்யாவிடில்  சந்ததியினருக்கு பிரச்சினை வரும் என நீதிபதி மோகன்ராம் பேசினார். செஞ்சி தாலுகா பாலப்பாடியில் செஞ்சி வட்ட சட்டபணிகள் மூலம் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் முதன்மை மாவட்ட நீதிபதி மோகன் ராம் பேசியதாவது:சிவில் வழக்குகளில் பெரும்பகுதி ஆவணங்களின் அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது.  இரு தரப்பிலும் ஆவணங்கள் இல்லாத நிலையில் தான் சாட்சிகளின் அடிப்படையில் முடிவு செய்யப்படும். பல இடங்களில் பட்டா வழங்க மறுப்பதாக புகார் கூறுகின்றனர். முதலில் பட்டா கோருபவருக்கு என்ன உரிமை, எந்த வழியில் உரிமை என்பதை பரிசீலிப்பார்கள். 100 ரூபாய்க்கு மேல் உள்ள சொத்துக்களை  கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாத ஆவணங்களை  கொண்டு உரிமை கோர முடியாது.  கிராமங்களில்  80 சதவீதம் பாகப் பிரிவினையை  கூறு சீட்டு மூலம் தீர்த்து கொள்கின்றனர். இதை 2 ரூபாயில் இருந்து 50 ரூபாய் பத்திரத்தில் எழுதி வைத்துக் கொண்டு  எனக்குத் தான் சொந்தம் என்று சொன்னால் அதை சட்டம் ஏற்றுக் கொள்ளாது.இப்போது சொத்தை சரியாக பாகம் பிர

போலி பத்திரங்களை பதிவு செய்தால் 3 ஆண்டுகள் சிறை

போலி பத்திரங்களை பதிவு செய்தால் 3 ஆண்டுகள் சிறை:  சட்டசபையில் புதிய சட்ட மசோதா நிறைவேற்றம் சென்னை : போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் அதிகாரம் குறித்து பத்திரப்பதிவு சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான சட்ட மசோதாவை சட்டசபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.   2021-ம் ஆண்டு பதிவு (தமிழ்நாடு 2-ம் திருத்தம்) சட்டம் என்று அழைக்கப்படும் இந்த சட்டம் உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரப்படும். இந்த சட்டத்தில் 22பி என்ற பிரிவு சேர்க்கப்படுகிறது. அதன்படி, போலி பத்திரங்கள் மற்றும் வேறு ஆவணங்களை பதிவு செய்யும் அலுவலரே மறுக்கலாம். 1908ஆம் ஆண்டு பதிவு சட்டத்தின்படி பதிவு செய்யும் அலுவலர் அல்லது பிற அதிகார அமைப்பால் ஒருமுறை பதிவு செய்யப்பட்ட ஆவணம் ஒன்றை மோசடி, ஆள்மாறாட்டம் போன்ற காரணத்திற்காக கூட ரத்து செய்வதற்கு அதிகாரம் இல்லாமல் இருந்தது. ஆள் மாறாட்டம், போலியான ஆவணங்கள்  மூலம் போலி பத்திரப்பதிவுகள் நடைபெறும் பட்சத்தில் அவை கண்டறியப்பட்டால், சார்பதிவாளரோ, பத்திரப் பதிவுத்துறை ஐஜியோ அதனை ரத்து செய்யக் கோரி நீதிமன்றங்களிடம் கோரலாம்.  இதனால், போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் அதிகாரம் நீ

புத்தகம்-4 பத்திரங்கள்

புத்தகம்-4 பத்திரங்கள்: சொத்துப் பத்திரமாக இருந்தாலும், அல்லது சொத்து சம்மந்தப்படாத பத்திரமாக இருந்தாலும், எல்லாப் பத்திரங்களையும் பதிவு செய்து கொள்ளலாம். பொதுவாக, பத்திரங்களை மூன்று வகையாகப் பிரித்து உள்ளார்கள். புத்தகம்-1ல் பதிவு செய்யப்படாத பத்திரங்களை புத்தகம்-4-ல் பதிவு செய்யப்படும். இதைத் தனியார் பத்திரங்கள்  என்று சொல்வர்.  Personal Document என்ற வகையைச் சேரும். இதில் சொத்து சம்மந்தப்பட்டு இருக்கலாம்  அல்லது இல்லாமலும் இருக்கலாம். ஆனால் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால்: அசையாச் சொத்தி்ன் உரிமை  இந்த மாதிரி பத்திரங்கள் மூலம் மாறி இருக்காது. உதாரணமாக ஒரு அசையாச் சொத்தை கிரயம் கொடுத்தால், அந்த சொத்தில் அவருக்கு உள்ள உரிமையை மற்றொருவருக்கு (கிரயம் வாங்கியவருக்கு) மாற்றிக் கொடுக்கிறார். எனவே அந்தச் சொத்தின் உரிமை அந்தப் பத்திரம் மூலம் மாறி வேறு ஒருவருக்குப் போகிறது. எனவே அப்படிப்பட்ட பத்திரங்களை புத்தகம்-1ல் பதிவு செய்வார்கள். ஆனால், சொத்து சம்மந்தப்பட்டு இருக்கும், ஆனால், அந்த சொத்தின் உரிமை மாறாது.  அப்படிப்பட்ட பத்திரங்களை புத்தகம்-4ல் பதிவு செய்வார்கள். உதாரணமாக: பவர்

புத்தகம்-3 பத்திரங்கள்

புத்தகம்-3 பத்திரம் சொத்துப் பத்திரமாக இருந்தாலும், அல்லது சொத்து சம்பந்தப்படாத பத்திரமாக இருந்தாலும், எல்லாப் பத்திரங்களையும் பதிவு செய்து கொள்ளலாம். பொதுவாக, பத்திரங்களை  மூன்று வகையாகப் பிரித்து உள்ளார்கள். இந்தப் புத்தகம்-3 பத்திரம்  என்பது, 1-வது புத்தகம், 4-வது புத்தகம்  இவைகளில் வராத  பத்திர வகையைச் சேர்ந்தது. இது ஒரு சிறப்பு வகை. இதில் உயில் பத்திரங்கள் மட்டும் அடங்கும். உயில் என்பது அசையாச் சொத்து சம்பந்தப்பட்டும்  இருக்கும் அல்லது சம்பந்தப்படாமலும்  இருக்கும். ஆனாலும், உயில் என்பது அதை எழுதி வைத்தவரின் இறப்புக்கு பின்னரே அது நடைமுறைக்கு வருவதால், அதை சிறப்பாக  புத்தகம்-3ல் பதிவு  செய்து வைப்பார்கள். உயிலும்  ஒரு தனிப்பட்ட பத்திரமாகும். இது பொதுப் பத்திர வகையை சேராது. எழுதிக் கொடுத்தவர் மட்டுமே அதன் நகலைப் பெற  முடியும், வேறு யாரும் அதைப் பெற்றுவிட முடியாது. அவரது இறப்புக்குப் பின்னர் அவரின் வாரிசுகள் அதன் நகலைப் பெறலாம். இதில் உயில், மற்றும்  உயிலை அடுத்து அதன் பின்  இணைப்பு எனச் சொல்லப்படும் “கொடுசில்” (Codicil) ஆகிய இரண்டும் சேரும். கொடுசில் என்றால்,  ஏற்கனவே எழுதிய உயிலில்

புத்தகம்-2 பத்திரங்கள்

புத்தகம்-2 பத்திரம் சொத்துப் பத்திரமாக இருந்தாலும், அல்லது சொத்து சம்மந்தப்படாத பத்திரமாக இருந்தாலும், எல்லாப் பத்திரங்களையும் பதிவு செய்து கொள்ளலாம். பொதுவாக, பத்திரங்களை மூன்று வகையாகப் பிரித்து உள்ளார்கள். புத்தகம்-2 என்பது பத்திரங்களைப்  பதிவு செய்து வைக்கும் புத்தகம் இல்லை. இந்தப்  புத்தகம்  பொதுவாக ஏதும் பதிவு செய்யாமல் காலியாகவே இருக்கும். நாம் பதிவுக்குக் கொடுக்கும் பத்திரங்கள்  சரியாக இருந்தால் தான், பதிவாளர் அதை பதிவு செய்வார். சரியாக இல்லை என்றால், பதிவாளர் பதிவு செய்ய மாட்டார். அப்படி எந்த எந்த காரணங்களுக்கு ஒரு பத்திரத்தின்  பதிவை மறுக்கலாம் என்று பதிவுச் சட்டம் பிரிவு 71-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி பதிவாளர் பதிவு செய்ய மறுத்தால், அதன் காரணத்தை அந்த பத்திரத்தின் பின் பக்கத்தில் எழுதி பதிவாளர் கையெழுத்துச்  செய்ய வேண்டும். அதே காரணத்தை அவர் வைத்துள்ள புத்தகம்-2ல் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த விபரங்கள் மட்டுமே புத்தகம்-2ல் இருக்கும். அவ்வாறு பதிவுக்கு மறுக்கும் காரணங்கள்: 1) அந்த பத்திரத்தில் உள்ள சொத்து அந்த பதிவு அலுவலக எல்லைக்குள் இல்லாமல் இருந்தால், பதிவு செ

புத்தகம்-1 பத்திரங்கள்

புத்தகம்-1 பத்திரங்கள் சொத்துப் பத்திரமாக இருந்தாலும், அல்லது சொத்து சம்மந்தப்படாத பத்திரமாக இருந்தாலும், எல்லாப் பத்திரங்களையும் பதிவு செய்து கொள்ளலாம். பொதுவாக, பத்திரங்களை மூன்று வகையாகப் பிரித்து உள்ளார்கள். :சொத்து சம்மந்தப்பட்ட பத்திரங்கள். இவை சொத்தின் உரிமையை மாற்றிக் கொடுக்கும் வகையில் இருக்கும். இந்த மாதிரி சொத்து சம்மந்தப்பட்ட பத்திரங்களை பதிவு  அலுவலகத்தில் புத்தகம்-1 (Book-I) பத்திரமாகவே பதிவு செய்வார்கள். உதாரணமாக ஒரு கிரயப் பத்திரத்தை எடுத்துப் பார்த்தால், அதில் பத்திர எண்ணுடன், அது எந்தப் புத்தகத்தில் பதிவாகி உள்ளது என்றும் எழுதி இருக்கும். புத்தகம்-1ல் பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை “பொதுப்பத்திரம்” அல்லது Public Documents என்று சொல்வார்கள்  பொதுப்பத்திரம் என்பது என்னவென்றால், இந்த வகைப் பத்திரப் பதிவை உலகுக்கு அறிவிப்பது எனப் பொருள்படும். ஒருவர் கிரயம் வாங்கியதை உலகுக்குத் தெரியப்படுத்துவது ஆகும்.  யார் வேண்டுமானாலும், அதன் காப்பியை வாங்கிப் பார்த்துக் கொள்ளலாம். மேலும் அந்த பதிவுச் செய்தியானது வில்லங்க புத்தகத்திலும் இடம் பெறும். எனவே யார் வேண்டுமானலும் அதைப் பார்க்கவ

ஏல சொத்துகளில் உள்ள, வெளியே தெரியாத செய்திகள்

ஏல சொத்துகளில் உள்ள, வெளியே தெரியாத செய்திகள் பொது  ஏல அறிவிப்பு என்று நாள்தோறும் செய்தித் தாள்களில் விளம்பரங்கள் வருவதை பார்த்து இருப்பீர்கள்.  பெரும்பாலும் வங்கிக் கடன் வாங்கி வீடுகள் வாங்கி விட்டு பிறகு வங்கிக் கடனை கட்ட  முடியாதவர்களின் வீடுகள் இப்படி ஏலத்திற்கு வரும். இப்படி ஏலத்திற்கு வரும் சொத்துகளை வாங்குவதற்கு என்றே சில வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். பெரும்பாலும் வங்கிகளில் வேலை செய்பவர்களுக்கு தெரிந்தவர்கள் மற்றும்  ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள், ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்கள் மேற்படி ஏல சொத்தை வாங்குவதற்கு  விருப்பம் காட்டுவார்கள். அவர்களின்  நம்பிக்கை என்னவென்றால், சந்தை மதிப்பை கணக்கிட்டு ஏலத் தொகையை நிர்ணயிக்கிறார்கள். வங்கிகளும் நல்ல சொத்து மதிப்பீட்டாளர்களை வைத்து ஏல சொத்துக்களை மதிப்பிடுவதால் நம்பிக்கைக்கு உரியதாக,  வில்லங்கம் இல்லாமல் இருக்கும் என்று கருதுகிறார்கள். ஆனால்  உண்மையில் களத்தில் சந்தை மதிப்பு உயர்வு என்பது வளர்ச்சியாலும் இருக்கிறது. வீக்கதாலும் இருக்கிறது. வளர்ச்சி இருக்கின்ற பகுதிகளில் உள்ள சொத்துக்களை ஏலம் எடுத்தால் நல்லது. ஆனால் வீக்கத்தால் விலை அத

Check List Before Buy A property

Check List Before Buy A property ஒரு நிலம் நம்மிடம் விற்பனைக்கு வந்தால்.உடனடியாக நாம் என்ன செய்ய வேண்டும்..! 1. முதன் முதலில் computerised EC 1975 முதல் போட்டு பார்க்க வேண்டும் 1975 முதல் பின்னோக்கி 1908 அல்லது 1858 வரை manual EC கட்டாயம் போட்டு பார்க்க வேண்டும். Zero value நிலம் EC யில்  நிலத்தின் மதிப்பு Zero மதிப்பு என்று இருந்தால் அது பூமிதான நிலம் & புறம்போக்கு அல்லது வில்லங்க நிலம் எனவே zero value நிலம் வாங்காதீர். 2. Double Document நிலம். Power of attorney (POA) double document  அதாவது  power-ல் வரும் நிலத்தை வாங்காதீர் இது double டாக்குமெண்ட் க்கு இட்டு செல்லும். POA  நிலத்தை வாங்கியே தீர வேண்டும் என்றால் Power கொடுத்தவர் உயிரோடு சுய நினைவோடு இருக்கிறாரா என்று கண்டுபிடியுங்கள் POA agreement நகல் வாங்கி அதில் குறிப்பிடப்படுள்ள அட்ரஸ்-இல் power கொடுத்தவரை நேரில் சந்தித்து விசாரியுங்கள். அடுத்து  அந்த power பத்திரம் செல்ல கூடியதா என்று கேளுங்கள் அதாவது power பத்திரம் எழுதி கொடுத்தவர் அதை ரத்து செய்து விட்டாரா என்றும் கேளுங்கள் முகவரும் (agent) விற்கலாம், principal (power எழு

கிரைய பத்திரம் எழுதி வாங்கும் போது கவனம் தேவை

கிரைய பத்திரம் எழுதி வாங்கும் போது கவனம் தேவை கிரைய   பத்திரம் எழுதும் போது வருவாய் மாவட்டம், பதிவு மாவட்டம், தனித் தனியாக எழுத வேண்டும். இரண்டும் ஒரே மாவட்ட பெயராக இருந்தாலும் , வருவாய் மாவட்டம், பதிவு மாவட்டம், தனித் தனியாக எழுத வேண்டும். கிராம எண்ணும் இருக்கும், சர்வே எண்ணும் இருக்கும், இரண்டைப் பற்றிய தெளிவான புரிதல் இருக்க வேண்டும். பட்டா எண், பட்டா படி  உட்பிரிவு ஆகி இருந்தால் புதிய சர்வே எண் குறிப்பிடப்பட  வேண்டும். சொத்து கூட்டுப் பட்டாவில் இருந்தால், சர்வே எண்ணின் ஒட்டு மொத்த பரப்பளவை குறிப்பிட்டு அதில், வடக்கு ஓரம்  இருந்து தொடங்கினால், வட பாகம் என்றும், தெற்கு, கிழக்கு, மேற்கில் இருந்து தொடங்கினால் தென்பாகம், கீழ்ப்பாகம், மேல்பாகம், என்று குறிப்பிட வேண்டும். அப்படி வடபாகம், தென்பாகம், கீழ்ப்பாகம், மேல்பாகம் என்று பிரித்தும் அதில் உள்ளே இடம் வாங்க போகிறீர்கள் என்றால் (எ.கா) வடபாகத்தில் கீழ மேலாக , தென்வடலாக, இத்தனை அடிநீளம், அகலம் என்று தெளிவாக குறிப்பிட வேண்டும். பெரும்பாலும்  கூட்டு பட்டாவில் இருந்தால் கட்டாயம் சொத்தின் நீள அளவுகளை அடியாலும், மீட்டரிலும், தெளிவாக குறிப்பிடு

பஞ்சாயத்து அங்கீகார மனைகளுக்கு டிடிசிபி அங்கீகாரம் பெறுவது எப்படி?

பஞ்சாயத்து அங்கீகார மனைகளுக்கு டிடிசிபி அங்கீகாரம் பெறுவது எப்படி? கடந்த முப்பது ஆண்டுகளாக விற்பனை செய்யப்பட்ட பஞ்சாயத்து அங்கீகார மனைகள், நான் அப்ஜெக்ஷன் சான்றிதழ் (NOC) மனைகள், அன்அப்ரூவ்டு மனைகள் ஆகியவை பதிவு செய்வதை சென்னை உயர்நீதி மன்றம் 2016 அக்டோபரில் தடை செய்தது. அதன் பிறகு 2017 வரை மேற்படி மனைப் பிரிவுகளை வாங்கவோ, விற்கவோ முடியாமல் பத்திரப் பதிவு அலுவலகங்களில் பதிவும் செய்ய முடியாமல் அப்படியே நிலுவையில் இருந்தது. 2017 இறுதியில் அரசு ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள், மேற்படி இடங்களில் மனை வாங்கியவர்களின் தொடர் கோரிக்கைகளை ஏற்று வரன்முறைப் படுத்துதல் அரசு உத்தரவை (அரசாணை எண்.78) போட்டது. மேலும் அந்த  அரசாணையின் சில முடிவுகள் கள நிலவரத்தோடு ஒத்துப் போகவில்லை. வரன்முறைப்படுத்துதல் கட்டணமும் அதிகமாக இருந்தது. மக்கள், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களின் தொடர் கோரிக்கைகள் ஏற்று மேற்கண்ட அரசாணையில் அரசு திருத்தங்களை கொண்டு வந்தது. .வரன்முறைப் படுத்துதலுக்கான தேதியை  டிடிசிபி (DTCP) அலுவலகம் இதுவரை பல முறை கெடு வைத்து, விண்ணப்பங்களைப் பரிசீலித்து வருகிறது. தமிழகம் முழுதும் அதிக அளவில் ம

தமிழ்நாடு பத்திர பதிவு அலுவலகங்கள்

தமிழ்நாடு பதிவு அலுவலகங்கள் தமிழ்நாட்டில்   நிலம் வாங்குதல் விற்றல்  தொடர்பான பதிவுகள், திருமணப் பதிவுகள்,  சமுதாயச் சங்கம் மற்றும் நிறுவனப் பதிவுகள்  செய்யும் பதிவு அலுவலகங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும்  முக்கிய ஊர்களில் அமைக்கப்பட்டுள்ளன. பதிவு அலுவலகப் பணிகள் பதிவு  அலுவலகங்களில்  குறிப்பாக கீழ்காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பத்திரப் பதிவு சான்றளிக்கப்பட்ட நகல் பத்திரங்கள் வில்லங்கமில்லாச் சான்றிதழ் வழங்கல் சமுதாயச் சங்கங்கள் பதிவு நிறுவனங்கள் பதிவு சிறுசேமிப்பு நிறுவனங்களைக் கண்காணித்தல் பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ் வழங்கல் இந்துத் திருமணங்களைப் பதிவு செய்தல் சிறப்புத் திருமணங்களைப் பதிவு செய்தல் இந்தியக் கிறித்துவத் திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்தல் பார்சி மதச் சட்டத்தின் கீழான திருமணப் பதிவுகள் இணைய வழியில் வில்லங்கமில்லாச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ் விண்ணப்பங்களை வழங்கல் வில்லங்கச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ், சமுதாயச் சங்கப் பதிவேடுகள் போன்றவற்றின் ஒப்பளிக்கப்பட்ட சான்றுகளை வழங்குதல் பதிவு செய்யப்பட்ட சமுதாயச் சங்கங்கள்/ சிறுசேமிப்பு நிறுவனங்கள் குறித்த விளக்கம

பதிவு செய்ய கட்டாயமற்ற ஆவணங்கள்

பதிவு செய்ய கட்டாயமற்ற ஆவணங்கள் அனைத்து ஆவணங்களையும் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை, விரும்பினால் பதிவு செய்யலாம். பதிவு செய்யப்படவில்லை என்ற காரணத்தை காட்டி  மேற்படி ஆவணங்களை நிராகரிக்க முடியாது. நீதிமன்ற ஏலத்தில் ஒரு அசையா பொருளை விற்க கொடுக்கும் விற்பனை சான்றிதழை (sales certificate) பதிவு செய்ய வேண்டும். அடமான கடன் சேர்ந்துவிட்டது அல்லது பற்று ஆகிவிட்டது என ஒப்புகொண்டு அதற்கு பதிலான அடமான பத்திரத்திலேயே குறித்து எழுதினால் அதனை பதிவு செய்ய தேவையில்லை. அரசாங்கம் வழங்கும் அசையா பொருள் நன்கொடை பட்டயம் வழங்கிய உத்தரவுகளை பதிவு செய்ய தேவையில்லை. கடன்  உறுதி சீட்டுகள் (Debenture) கூட்டுறவு கழகங்களில் வழங்கப்பட்டு இருந்தாலும் பதிவு செய்ய தேவையில்லை. நீதிமன்றத்தில் சமரசம் பேசி சமாதான பத்திரம் எழுதினால் பதிவு செய்ய தேவையில்லை.  ஒரு ஆண்டு காலத்திற்குள் இருக்கும் குத்தகை/வாடகைகளை பதிவு செய்ய தேவையில்லை. சொத்து விற்பனை உடன்படிக்கைகள்  பதிவு செய்ய வேண்டிய கட்டாயமில்லை. சொத்து எதுவும் கைமாறவில்லை என்பதால் அதனால் சச்சரவு வரும்போது நீதிமன்றம் செய்ய வேண்டுமானால் பதிவு செய்து இருக்க வேண்டும். உயில

ஆவணங்களில் சில வகைகள்

ஆவணங்களில் சில வகைகள் வீடு - மனை உள்ளிட்ட சொத்துக்களின் உரிமை மாற்றத்தை குறிப்பிடும் ஆவணங்கள் பல்வேறு வகைகளாக இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை பற்றிய விவரங்களை நாம் கீழே பார்க்கலாம். தானப் பத்திரம் ஒருவருக்கு சொந்தமான சொத்துக்களை பிறருக்கு பணம் அல்லது வேறு பிரதி பலன் போன்ற எவ்விதமான பயனையும் எதிர்பார்க்காமல் தானமாக எழுதி கொடுக்கும் ஆவணம் தானப்பத்திரம் எனப்படும். பாக பிரிவினை பத்திரம் ஒருவரது சொத்துக்களை அவருடைய வாரிசுகளுக்கு சரிசமமாக பிரித்து தனித்தனியாக சம்பந்தப்பட்டவர்களது பெயருக்கு ஆவணமாக கிரயம் செய்து கொடுப்பதை பாகப் பிரிவினை கிரயப் பத்திரம் என்று குறிப்பிடுவார்கள். செட்டில்மென்டு பத்திரம் தன்னுடைய சொத்துக்களை அவரது விருப்பத்தின் அடிப்படையில், வாரிசுகளுக்கு அவரது எண்ணப்படி பிரித்து எழுதி வைக்கப்படும் ஆவணம் செட்டில்மென்டு பத்திரம் ஆகும். உயில் பத்திரம் ஒருவருக்கு சொந்தமான வீடு, மனை உள்ளிட்ட இதர சொத்துக்களை அவரது காலத்துக்கு பிறகு யார் யாருக்கு என்னென்ன அளவுகளில் உரிமை என்ற விவரங்களை உயில் மூலம் எழுதி வைப்பது உயில் பத்திரம் எனப்படுகிறது. கிரய பத்திரம் தன்னுடைய  சொத்துக்களை இன்னொருவர் ப

பகிர்வு பத்திர மாதிரி

பகிர்வு பத்திர மாதிரி பகிர்வு  பத்திரத்திற்கான பொதுவான வடிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த பத்திரம் வாசகர்களுக்கு ஒரு செயலைப் பற்றிய பொதுவான பார்வையை அளிப்பதற்காக மட்டுமே என்பதை இங்கே கவனியுங்கள். (1) திரு. _________________, S / o ._____________, வயது ______ ஆண்டுகள், தொழில் __________, __________________________ இல் வசிக்கும் __________ இந்த _________ நாளில் செய்யப்பட்ட பகிர்வு. இனி முதல் கட்சி என்று குறிப்பிடப்படுகிறது. (2) திரு _________________, எஸ் / ஓ ._____________, வயது ______ ஆண்டுகள், தொழில் __________, வசிப்பது __________________________. இனிமேல் இரண்டாவது கட்சி என்று குறிப்பிடப்படுகிறது. (3) மிஸ் _________________, டி / ஓ ._____________, வயது ______ ஆண்டுகள், தொழில் __________, வசிப்பது __________________________. இனிமேல் மூன்றாம் தரப்பு என்று குறிப்பிடப்படுகிறது. WHEREAS; கட்சிகள்  தங்கள் கூட்டு மற்றும் பிரிக்கப்படாத இந்து குடும்பத்தின் உறுப்பினர்கள் மற்றும் கூட்டாளிகள் மற்றும் ________________ இல் அமைந்துள்ள ஒரு வீட்டு சொத்து,  அவற்றின் விவரங்கள் அட்டவணை 'A' இ

வாய்மொழி பகிர்வு அல்லது சட்டத்தின் கீழ் குடும்ப தீர்வுக்கான சிகிச்சை

வாய்மொழி பகிர்வு அல்லது சட்டத்தின் கீழ் குடும்ப தீர்வுக்கான சிகிச்சை இந்துக்கள்,  சமணர்கள், பௌத்தர்கள் மற்றும் சீக்கியர்களிடையே பரம்பரை நிர்வகிக்கும் சட்டங்களின் கீழ், ஒரு சொத்தின் முதல் வகுப்பு வாரிசுகள் குடும்ப குடியேற்றத்தின் வாய்மொழி குறிப்பில் நுழைந்து, பரஸ்பர ஏற்றுக் கொள்ளக்கூடிய விதிமுறைகளில் சொத்தை பிரிக்கலாம்.  பகிர்வு  பத்திரத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தாமல் இந்த வாய்வழி ஒப்பந்தம் எட்டப்பட்டதால், பரிவர்த்தனையை பதிவு செய்ய வேண்டிய அவசியம் முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. நிதின் ஜெயின் மற்றும் அஞ்சு ஜெயின் மற்றும் பிறர் வழக்கில் தனது தீர்ப்பை வழங்கும்போது, தில்லி உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச், 2007 ல், சொத்தை வாய்மொழியாகப்  பிரித்தால் முத்திரைக் கடமை செலுத்தப்படாது என்று தீர்ப்பளித்தது. "சொத்துக்களைப் பிரிக்கும் / பகிர்வு செய்யும் வாய்வழி குடும்ப தீர்வுக்கு வருவது சட்டபூர்வமாக அனுமதிக்கப்படுகிறது, அதன்பிறகு, ஒரு குறிப்பை எழுத்துப்பூர்வமாக பதிவுசெய்க, இதன் மூலம் தற்போதுள்ள கூட்டு உரிமையாளர்கள், சந்ததியினருக்காக, சொத்து ஏற்கனவே பகிர்வு செய்யப்பட்டுள்ளது அல்லது பிரிக்கப்பட

பகிர்வு பத்திரத்திற்கும் பகிர்வு வழக்குக்கும் உள்ள வேறுபாடு

பகிர்வு பத்திரத்திற்கும் பகிர்வு வழக்குக்கும் உள்ள வேறுபாடு சட்டத்தின்  விதிகளின் கீழ், ஒரு பகிர்வு பத்திரத்தின் மூலமாகவோ அல்லது பகிர்வு வழக்கு மூலமாகவோ ஒரு சொத்து பிரிக்கப்படும். இரண்டாவது விருப்பத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் எழுகிறது, ஒரு சர்ச்சை ஏற்பட்டால் அல்லது இணை உரிமையாளர்கள் பகிர்வுக்கு பரஸ்பரம் உடன்படாத சந்தர்ப்பங்களில்.இந்த வழக்கு, ஒரு பகிர்வு வழக்கு பொருத்தமான நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும்.  ஒருவர் வழக்குத்  தாக்கல் செய்வதற்கு முன், அவர்கள் அனைத்து இணை உரிமையாளர்களுக்கும் ஒரு கோரிக்கையை வெளியிட வேண்டும். உங்கள் கோரிக்கையை கட்சிகள் ஏற்க மறுத்தால், இந்த விஷயத்தில் நீதிமன்றத்தை நகர்த்துவதற்கான உங்கள் சட்ட உரிமைகளுக்குள் நீங்கள் இருக்கிறீர்கள்.  இந்திய  சட்டங்களின்படி, வேதனைக்குள்ளான கட்சி மூன்று ஆண்டுகளுக்குள் நீதிமன்றத்தை அணுக வேண்டும், ஒரு பகிர்வு வழக்கு தாக்கல் செய்வதற்கான உரிமை கிடைத்த நாளிலிருந்து. இருப்பினும், இரண்டு கருவிகளும் ஒரே நோக்கத்திற்காக சேவை செய்கின்றன – அவை கூட்டு உரிமையாளர்களின் கூட்டாக சொந்தமான சொத்தில் உரிமைகளை உருவாக்கி அணைக்கின்றன. எச்சரிக்கை

பகிர்வு பத்திரத்தில் பதிவு மற்றும் முத்திரை வரி

பகிர்வு பத்திரத்தில் பதிவு மற்றும் முத்திரை வரி சட்டப்பூர்வ செல்லுபடியை அடைய, அசையாத சொத்து அமைந்துள்ள பகுதியின் துணை பதிவாளரிடம் ஒரு பகிர்வு பத்திரம் பதிவு செய்யப்பட வேண்டும். 1908 ஆம் ஆண்டு இந்திய பதிவுச் சட்டத்தின் 17 வது பிரிவின் கீழ் இது கட்டாயமாகும்.  இதன் பொருள், பகிர்வில் ஈடுபட்டுள்ள கட்சிகள், முத்திரைக்  கட்டணக் கட்டணங்களையும் (இந்திய முத்திரைச் சட்டம், 1899 இன் விதிகளின் கீழ்) மற்றும் பதிவு கட்டணத்தையும் செலுத்த வேண்டும். பகிர்வு பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, டெல்லியில், பிரிக்கப்பட்ட பங்கின் மதிப்பில் 2% பகிர்வு  பத்திரத்தில் முத்திரைக் கட்டணமாக செலுத்தப்பட வேண்டும்.  மகாராஷ்டிராவில் பகிர்வு பத்திரங்களை  பதிவு செய்வதற்கும், 1% பதிவு கட்டணத்துடன் அதே விகிதம் பொருந்தும். (இருப்பினும், இணை உரிமையாளர்களுக்கு இது கட்டாயமில்லை பகிர்வு பத்திரத்தை மாநிலத்தில் பதிவு செய்யுங்கள்.) முத்திரைக்  கடமையைக் கணக்கிடும் முறை ஒரு எடுத்துக்காட்டு மூலம் சிறப்பாக விளக்கப்படும்: ஒரு தந்தை, பகிர்வு மூலம், ரூ .5 கோடி மதிப்புள்ள தனது தோட்டத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்து, 40% பங

நீங்கள் வாங்க வேண்டுமா அல்லது வாடகைக்கு விட வேண்டுமா?

நீங்கள் வாங்க வேண்டுமா? அல்லது வாடகைக்கு விட வேண்டுமா? வீடு வாங்குவது  என்பது எந்தவொரு குடும்பத்திற்கும் தனிப்பட்ட மற்றும் உணர்ச்சிபூர்வமான முடிவு என்பதை மறுப்பதற்கில்லை.  ஒரு வீட்டை சொந்தமாக வைத்திருப்பதன் பெருமை மற்றும் ஒரு குடியிருப்பை வாடகைக்கு எடுப்பதில் அது மதிப்பெண் பெறும் விதம், வீடு வாங்கும் முடிவுகளை பாதிக்கும் சில காரணிகள். காரியாலி கருத்துப்படி, “ஒருவர் அதை ஒரு நிதிக் கண்ணோட்டத்தில் பார்த்தால், ரியல் எஸ்டேட் என்பது குறைந்த ஆபத்து கொண்ட ஒரு சொத்து வகுப்பாகும்.  மேலும், தொற்றுநோய்  ஒரு வீட்டை வாங்குவது பாதுகாப்பான முதலீடாக இருக்கலாம் என்ற உண்மையை எடுத்துக் காட்டுகிறது. ஒரு ஆரம்ப மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் சொத்து குறைந்த வருமானத்தை அளித்தாலும், அல்லது ஒருவர் முதலீட்டில் அதிக வருவாயை எதிர்பார்க்கிறார்களோ, ஒருவர் வீடு வாங்கும் போது கவனிக்க வேண்டிய புள்ளிகள். ” சந்தை நிலைமைகள் வாங்குதல் மற்றும் வாடகைக்கு எடுப்பது குறித்த முடிவுகளை பாதிக்கின்றன என்ற உண்மையை எடுத்துக்காட்டி சூட் மேலும் கூறினார்:  “வாடகைக்கு  எதிராக சொந்தமாக வைத்திருப்பதன் செயல்திறன் பெரும்பாலும் சந்தை நிலைமைகள

விரோதமான அண்டை வீட்டாரை சமாளிக்க தரகர்களுக்கான உதவிக் குறிப்புகள்

விரோதமான அண்டை வீட்டாரை சமாளிக்க தரகர்களுக்கான உதவிக் குறிப்புகள் விரோதமான  அண்டை வீட்டாருக்கு எதிரான அன்பற்ற வார்த்தைகள் எதிர்மறையாக மாறிவிடும். கதையின்  பக்கத்தைப் புரிந்து கொள்ள விரோதமான வாங்குபவரைச் சந்திக்கவும். பக்கத்து  வீட்டு மனையை விற்க வேண்டியிருக்கும் போது, விரோதமான அண்டை வீட்டாரின் நியாயமான குறைகளைப் புரிந்து கொள்ளுங்கள். பிரச்சினைகளை  சரிசெய்ய உங்கள் வாடிக்கையாளரிடம் (பில்டர்) கேளுங்கள், இதனால் சர்ச்சைகள் நீதிமன்றத்திற்கு இழுக்கப்படாது. விரோதமான  அண்டை வீட்டாருடன் நட்பாக இருங்கள் மற்றும் தனிப்பட்ட உறவை உருவாக்குங்கள், இது அவருடைய குறைகளை நியாயமானதாகவோ அல்லது தவறானதாகவோ ஏற்றுக்கொள்ள வேண்டும். சாத்தியமான  வாங்குபவர், கட்டடம் கட்டுபவர் மற்றும் விரோதமான அண்டை வீட்டாருக்கு இடையே ஒரு பாலமாக இருங்கள். பில்டருக்கும்  வாங்குபவருக்கும் இடையே உள்ள முரண்பாடுகளை வெளிப்படுத்துவது, சாத்தியமான வாங்குபவரின் மனதில் தவறான விளையாட்டின் சந்தேகத்தை குறைக்கலாம்.

பகிர்வு பத்திரம் செயல்படுத்தப்பட்ட பிறகு ஒரு சொத்துக்கு என்ன நடக்கும்?

பகிர்வு பத்திரம் செயல்படுத்தப்பட்ட பிறகு ஒரு சொத்துக்கு என்ன நடக்கும்? பகிர்வு பத்திரம் நடைமுறைக்கு வந்ததும், சொத்தின் ஒவ்வொரு பங்கும் ஒரு சுயாதீனமான நிறுவனமாக மாறும். சொத்தின் ஒவ்வொரு பிரிக்கப்பட்ட பங்கும் ஒரு புதிய தலைப்பைப் பெறுகிறது. மேலும், உறுப்பினர்கள் மற்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பங்குகளில் தங்கள் கோரிக்கையை சரணடைகிறார்கள். உதாரணமாக,  ராம், ஷியாம் மற்றும் மோகன் ஒரு பகிர்வு பத்திரத்தின் மூலம் ஒரு சொத்தை பிரித்தால், ராம் மற்றும் ஷியாம் மோகனுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் தங்கள் உரிமையை விட்டுக் கொடுப்பார்கள்.  இதேபோல்,  ராம் மற்றும் ஷியாமுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளில் மோகன் தனது உரிமையை விட்டுக் கொடுப்பார்.  பொது  தவிர எளிதாக்கும் உரிமைகள் பொருந்தக்கூடிய பகுதிகள், ஒவ்வொன்றும் ஒரு எஸ்டேட்டுக்குள் ஒரு சுயாதீனமான சொத்தை வைத்திருக்கின்றன.  இது அவர்களின்  பங்கை அவர்கள் விரும்பும் விதத்தில் கையாள்வதற்கான உரிமையையும் வழங்குகிறது. பகிர்வுக்குப் பிறகு, ஒவ்வொரு கட்சியும் சொத்து மாற்றும் செயல்முறையை முடிக்க வேண்டும், பகிர்வு  பத்திரம் மாற்றத்தை சட்டப்பூர்வமாக செல்லுபடியாக்குகிறது நன்

பகிர்வு பத்திரத்தில் பரம்பரை சட்டங்களைப் பயன்படுத்துதல்

பகிர்வு பத்திரத்தில் பரம்பரை சட்டங்களைப் பயன்படுத்துதல் எந்தவொரு சொத்தின் பகிர்வும் உட்பட்டது பரம்பரை விதிகளுக்கு. இது இந்துக்கள்,  முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களிடையே சொத்துப் பிரிவை நிர்வகிக்கும் பரம்பரைச்  சட்டங்களைக் கொண்டு வருகிறது.  பகிர்வு நேரத்தில், ஒவ்வொரு உறுப்பினரின் பங்கு, பொருந்தக் கூடிய பரம்பரைச் சட்டங்களின் கீழ் அவருக்கு உள்ள  உரிமையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.   இந்துக்களைப் பொறுத்தவரையில், இந்து வாரிசு சட்டம், 1956 இன் விதிகள்,  பரம்பரை தோட்டத்தைப் பிரிக்கும் நேரத்தில் பொருந்தும். நன்றி: www.housing.com 

ரியல் எஸ்டேட் தரகு நிறுவனங்கள் மற்றும் முகவர்களால் வழங்கப்படும் சேவைகள்

ரியல் எஸ்டேட் தரகு நிறுவனங்கள் மற்றும் முகவர்களால் வழங்கப்படும் சேவைகள் தரகர்கள் மற்றும் பல சேவைகள் உள்ளன தரகு  நிறுவனங்கள் வழங்கல். இவற்றில் அடங்கும்: விற்பனை அல்லது வாங்குவதற்கான சொத்து பட்டியல்கள் வாடகைக்கான பட்டியல்கள் வீட்டு விற்பனை மற்றும் கொள்முதல் வீட்டு வாடகை தள வருகைகள் வீட்டுக் கடன்களுக்கான  உதவி சொத்து பதிவு போன்றவற்றில் உதவி. Housing.com  போன்ற முழு-ஸ்டாக் தரகு நிறுவனங்கள் ஒரே தளத்தைப் பயன்படுத்தி இந்தச் சேவைகள் அனைத்தையும் வழங்குகின்றன, தனிப்பட்ட தரகர்கள் குறிப்பிட்ட சலுகைகளில் கவனம் செலுத்துகிறார்கள், குறிப்பிட்ட சுற்றுப்புறங்களில் கவனம் செலுத்துகிறார்கள். மேற்கு நாடுகளுக்கு எதிராக இந்தியாவில்  தரகு கமிஷன் குடியிருப்புப் பிரிவில், தரகு நிறுவனங்கள் மற்றும் சொத்து முகவர்கள் பொதுவாக பரிவர்த்தனை மதிப்பில் 2% தரகுக் கட்டணமாகக் கேட்கின்றனர். வணிக ரியல் எஸ்டேட் தரகு  வணிகத்தில் கட்டணங்கள் மிக அதிகம். அமெரிக்கா போன்ற முதிர்ச்சியடைந்த சந்தைகளில் காணப்படும் போக்குகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் சொத்து தரகு கட்டணம் மிகவும் குறைவாக உள்ளது என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். மேற்கில்

பகிர்வு பத்திரத்தின் கீழ் சொத்து எவ்வாறு பிரிக்கப்படுகிறது?

பகிர்வு பத்திரத்தின் கீழ் சொத்து எவ்வாறு பிரிக்கப்படுகிறது? சொத்து வாங்கியதில் முதலீடு செய்த இரண்டு நபர்களிடையே ஒரு சொத்து பிரிக்கப்பட்டால், அந்தந்த பங்களிப்பை அடிப்படையாகக் கொண்டது. இரண்டு உடன்பிறப்புகள் ஒரு சொத்தை வாங்கினால், ரூ. 1 கோடி என்று சொல்லுங்கள், ஒவ்வொன்றும் ரூ .50 லட்சம் பங்களித்திருந்தால், சொத்து பகிர்வு பத்திரத்தின் மூலம் இரு கட்சிகளுக்கும் சமமாக பிரிக்கப்படும்.  அவர்களின் பங்களிப்பின் விகிதம் 60:40 ஆக இருந்தால், பிரிவு இந்த முறையில் இருக்கும். எவ்வாறாயினும், ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு பிரிக்கப்படாத சொத்தில் சம பங்கைக் கொண்டிருப்பதாக சட்டம் கருதுகிறது.  இல்லையெனில் குறிப்பிட்ட ஆவண சான்றுகள் தயாரிக்கப் படாவிட்டால். பரம்பரைச் சொத்தின் விஷயத்தில், இணை உரிமையாளர்கள் தங்கள் மதத்தை நிர்வகிக்கும் பரம்பரைச் சட்டத்தில் அவர்கள் மேற்கொண்ட சிகிச்சையின் அடிப்படையில் ஒரு சொத்தில் தங்கள் பங்கைப் பெறுவார்கள். நன்றி: www.housing.com 

உங்களுக்கு பகிர்வு பத்திரம் எப்போது தேவை?

உங்களுக்கு பகிர்வு பத்திரம் எப்போது தேவை? இணை உரிமையாளர்கள் ஒரு சொத்தின் மீது மட்டுப்படுத்தப்பட்ட உரிமைகளை மட்டுமே அனுபவிக்கிறார்கள்,  ஏனெனில் அவற்றின் பிரிக்கப்படாத பங்குகள் நிச்சயமற்ற தன்மைக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.  இந்த நபர்கள் அனைவரும் கூட்டு உரிமையாளர்களாக இருந்தாலும், ஒவ்வொரு தரப்பினரும் அத்தகைய முன்மொழிவுக்கு ஒப்புக் கொள்ளாவிட்டால்,  அவர்கள் தங்கள் விருப்பப்படி சொத்தை வாடகைக்கு விடவோ, விற்கவோ அல்லது பரிசாகவோ வழங்க முடியாது.  அடிப்படையில், அத்தகைய பரிவர்த்தனைகளை மேற்கொள்ள ஒவ்வொரு இணை உரிமையாளரின் சம்மதம் தேவை.  ஒரு பகிர்வு பத்திரத்தின் தேவை எழுகிறது சொத்தில் பங்குகளின் தெளிவான பிரிவை உருவாக்குவது முக்கியம். நன்றி: www.housing.com 

பகிர்வு பத்திரம் என்றால் என்ன?

பகிர்வு பத்திரம் என்றால் என்ன? பலரால் ஒரு சொத்தின் கூட்டு உரிமை மிகவும் பொதுவானது, குறிப்பாக  இது ஒரு குடும்பத்திற்கு சொந்தமான ஒரு நிலையான தோட்டமாக இருந்தால். பகிர்வுக்கான தேவை எழுகிறது, இணை உரிமையாளர்கள் தங்கள் சொந்த வழியில் செல்ல முடிவு செய்யும் போது,  சொத்து மீதான ஒருங்கிணைந்த உரிமை அவர்களின் உரிமைகளை கட்டுப்படுத்துகிறது.  இந்த மாற்றத்தை பாதிக்கப் பயன்படும் சட்டக் கருவி,  சட்டரீதியான பேச்சுவார்த்தை அல்லது பகிர்வு பத்திரம் என அழைக்கப்படுகிறது.  ஒரு பகிர்வு பத்திரம் பெரும்பாலும் குடும்பங்களால் பயன்படுத்தப்படுகிறது, உறுப்பினர்களின் பங்குகளை மரபுரிமை பெற்ற சொத்துக்களில் பிரிக்க. பிரிவுக்குப் பிறகு, ஒவ்வொரு உறுப்பினரும் சொத்தில் தனது பங்கின் சுயாதீன உரிமையாளராகி,  தனது விருப்பப்படி, தனது சொத்தை விற்கவோ, வாடகைக்கு அல்லது பரிசாக வழங்கவோ சட்டப்பூர்வமாக சுதந்திரமாக உள்ளார். நன்றி: www.housing.com 

ரியல் எஸ்டேட் சட்ட விதிகள் அறிவிப்பு!

RERA ரியல் எஸ்டேட் சட்ட விதிகள் அறிவிப்பு!   மனை விற்பனை முகவர்கள் ஒழுங்குமுறை ஆணையத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்… ரியல் எஸ்டேட்  சட்ட விதிகள் அறிவிப்பு மனை விற்பனை முகவர்கள் ஒழுங்குமுறை ஆணையத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் சென்னை : ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை சட்ட விதிகள் தமிழக அரசு அறிவித்துள்ளது.  அதன்படி மனை விற்பனை முகவர்கள் கட்டாயம் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். இவ்விதிகள் நடந்து வரும் மற்றும் எதிர்கால திட்டங்கள் அனைத்துக்கும் பொருந்தும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.  இது  குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு ரியல் எஸ்டேட் ஒழுங்குபடுத்துதல் சட்டத்தை மத்திய அரசு கடந்த மே 1ம் தேதி முதல் நடைமுறைப் படுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசும் தமிழ்நாடு கட்டிட மனை விற்பனை (முறைப்படுத்துதலும் மேம்படுத்துதலும்) விதிகள் 2017 உருவாக்கியுள்ளது. அதன்படி  சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அல்லது அவரது பிரதிநிதி, செயலாளர் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் செயலாளர், சட்டத்துறை ஆகியோர் அடங்கிய தேர்வுக்குழு ஒழுங்குமுறை குழுமத்தின் தலைவர் மற்றும் குழ

RERA வின் முன் உள்ள சவால்கள் என்ன?

RERA வின் முன் உள்ள சவால்கள் என்ன? RERA உண்மையில் ரியல் எஸ்டேட்டில் எடுக்கப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை மற்றும் சமீபத்திய காலங்களில் முடிவுகளைக் காட்டியுள்ளது.  RERA சட்டம், ரியல் எஸ்டேட் துறையில் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்தி, பதிவு செய்யாதவர்களை சந்தையில் இருந்து அகற்றுவதன் மூலம் முதலீட்டாளர்கள் மற்றும் வீடு வாங்குபவர்களுக்கு பாதுகாப்பான சூழலை  வழங்குகிறது. இருப்பினும், RERA சட்டத்தில் பல சவால்கள் மற்றும் குறைபாடுகள் உள்ளன. திட்ட அனுமதிகள் தொடர்பான விதிகள் இல்லாதது - வீடு வாங்குபவர்கள்  மற்றும் ரியல் எஸ்டேட் டெவலப்பர்களின் கடமைகள் மற்றும் உரிமைகள் பற்றி விரிவாகப் பேசினாலும், RERA சட்டம் அரசாங்க அதிகாரிகளின் அனுமதியின் காரணமாக தேவையான அனுமதிகளில் தாமதம் ஏற்படுவதைப் பற்றி மௌனமாக உள்ளது.  பொதுவாக, அனைத்து அரசாங்க அனுமதிகளும் விண்ணப்பித்த நாளிலிருந்து இரண்டு ஆண்டுகள் வரை ஆகும். காலதாமதத்திற்கு அரசு அதிகாரிகளை இந்த சட்டம் பொறுப்பேற்கவில்லை. ஒற்றைச் சாளர பொறிமுறை இல்லை  -  ரியல் எஸ்டேட் திட்ட உருவாக்குநர்கள்  ஒவ்வொரு அரசாங்கத் துறையிலிருந்தும் தனிப்பட்ட அனுமதியைப் பெறுவதற்கான கடின

ரியல் எஸ்டேட் துறையில் நடக்கும் ஊழலை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை - நீதிமன்றம்

ரியல் எஸ்டேட் துறையில் நடக்கும் ஊழலை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை - நீதிமன்றம் ரியல் எஸ்டேட் துறையின்  அனைத்து நடவடிக்கைகளிலும் ஊழல் தலை விரித்தாடுவதைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை   என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ’திருப்போரூரில்  100 ஏக்கரில் வீடுகள் கட்டி விற்ற ரியல் எஸ்டேட் நிறுவனம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை’ என, குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கத்தினர், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் புகார் அளித்தனர்.  ஆனால்,  திருப்போரூர் பஞ்சாயத்து செயல் அதிகாரி 2014-ஆம் ஆண்டே பணி முடிப்பு சான்று வழங்கி விட்டதாக ரியல் எஸ்டேட் நிறுவனம் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை ஏற்று, புகாரை விசாரிக்க, ஆணையம் மறுத்து விட்டது. இதை எதிர்த்து, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை  மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதில், புகாரை  3 மாதங்களில் விசாரித்து முடிவெடுக்க உத்தரவிடப்பட்டது. இந்த  உத்தரவை எதிர்த்து, ரியல் எஸ்டேட் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விச

டாடா மோட்டார்ஸ் புதிய திட்டம்.. அசோக் லேலண்ட், எய்ச்சர் உடன் போட்டி..!

டாடா மோட்டார்ஸ் புதிய திட்டம்.. அசோக் லேலண்ட், எய்ச்சர் உடன் போட்டி..! இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் தனது கார் உற்பத்தி மற்றும்  வர்த்தகத்திற்கான 5 ஆண்டு திட்டத்தைச் சிறப்பாகத் திட்டமிட்டு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை 3 பிரிவுகளாகப் பிரித்து முதலீட்டை ஈர்த்தது பெரிய அளவில் டாடா நிர்வாகத்தின் திட்டமிடலில் பயன்பட்டு உள்ளது. தற்போது  டாடா மோட்டார்ஸ் தனது கவனத்தை வர்த்தக வாகன பிரிவின் மீது திருப்பியுள்ளது. டாடா மோட்டார்ஸ்   டாடா மோட்டார்ஸ் எலக்ட்ரிக் கார் உற்பத்தியில் இந்தியாவின் முன்னோடியாக விளங்கி வரும் நிலையில், வர்த்தகம் மற்றும் உற்பத்தி இலக்கு என அனைத்தையும்  திட்டமிட்டு முழு ஈடுபாட்டுடன் பணியாற்றி வருகிறது. இதன் மூலம் டாடா மோட்டார்ஸ் தனது கவனத்தை வர்த்தக வாகனங்கள் பிரிவின் வளர்ச்சி மீது திருப்பியுள்ளது. டிரக் உற்பத்தி   இந்தியாவின் மிகப்பெரிய டிரக் உற்பத்தி நிறுவனமாக இருக்கும் டாடா மோட்டார்ஸ் தனது வர்த்தக வாகன பிரிவை வளர்ச்சி பாதைக்குக் கொண்டு செல்லவும், அதேவேளையில் தனது எலக்ட்ரிக் வாகனங்கள் கொள்கைக்கு அடிப்படையாக