Posts

Showing posts from January, 2022

மகாராஷ்டிரா அரசு அறிவித்த சூப்பர் சலுகை.. தமிழ்நாட்டுக்கு எப்போது வரும்..?

மகாராஷ்டிரா அரசு அறிவித்த சூப்பர் சலுகை.. தமிழ்நாட்டுக்கு எப்போது வரும்..? இந்தியாவில்  லாக்டவுன் கட்டுப்பாடுகள் காரணமாக அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்ட துறைகளில் ஒன்றான ரியல்  எஸ்டேட் துறையின் வர்த்தகத்தை மேம்படுத்த மகாராஷ்டிரா அரசு அனைத்து ப்ரீமியம்  தொகையையும் 50 சதவீதம் குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. நிதி சுமை பொதுவாக  இந்த ப்ரீமியம் தொகை கட்டுமான நிறுவனங்கள் மாநில அரசுக்குச் செலுத்தும், ஆனாலும் இந்த நிதிச்  சுமை வீடு வாங்குவோர் மீது தான் விதிக்கப்படுகிறது.  இதைக் கருத்தில் கொண்டு மகாராஷ்டிரா அரசு ப்ரீமியம் தொகையில் 50 சதவீதத்தைக் குறைப்பதன் மூலம் வீடுகளின் விலை பெரிய அளவில் குறைய வாய்ப்புகள் உள்ளது. மகாராஷ்டிரா அரசு   மேலும்  இந்தச் சலுகை டிசம்பர் 31, 2021 வரையில் நடைமுறையில் இருக்கும் என மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு இம்மாநில  ரியல் எஸ்டேட் துறைக்கு மிகப்பெரிய சலுகையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரியல் எஸ்டேட் துறை பாதிப்பு   2020ல்  கொரோனா தொற்றும் மற்றும் லாக்டவுன் கட்டுப்பாடுகள் ரியல் எஸ்டேட் துறையைக் கடுமையாகப் பாதித்தது. ஆனால் லாக்டவுன் கட்டுப்ப

மகாராஷ்டிரா ரேரா

மகாராஷ்டிரா ரேரா மகாராஷ்டிரா  ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம்  (மஹாரா) மே மாதம் நடைமுறைக்கு வந்தது  இந்தியாவில்  மிகவும் சுறுசுறுப்பான ரியல் எஸ்டேட்  ஒழுங்கு முறை அதிகாரிகளில் ஒன்றாகக் கருதப்படும் மகாராஷ்டிரா ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் (மகாரா) பிப்ரவரி 27, 2020 நிலவரப்படி 25,000 பதிவு செய்யப்பட்ட திட்டங்களையும் 23,000 பதிவு செய்யப்பட்ட சொத்து முகவர்களையும் கொண்டுள்ளது. 10,000 க்கும் மேற்பட்ட புகார்கள், அவற்றில் 71% தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. சமரச பொறிமுறையைத் தொடங்கிய முதல் மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்கிறது மகாராஷ்டிராவில்  வேதனை அடைந்த வீடு வாங்குபவர்கள், தங்கள் டெவலப்பர்களுடனான தகராறுகளின் ஆரம்ப மற்றும் இணக்கமான  தீர்வை எதிர்நோக்க முடியும், ரேராவின் பிரிவு 32 (கிராம்) இன் கீழ் சமரச பொறிமுறையைத் தொடங்கிய இந்தியாவின் முதல் மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்கிறது.  மாற்று தகராறு தீர்மானம் (ADR). சமரச செயல்முறை 2018 பிப்ரவரி 1 முதல் ஆன்லைனில் செல்லும் மற்றும் சமரச பெஞ்சுகள் முன்  விசாரணைகள் மார்ச் 2018 முதல் வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எந்தவொரு வேதனைக்குள்ளான ஒதுக்கீட்

ஒரு பில்டர் எப்படி RERA இணக்கமாக இருக்க முடியும்

ஒரு பில்டர் எப்படி RERA இணக்கமாக இருக்க முடியும் திட்ட  பதிவு. விளம்பரம். திரும்பப் பெறுதல் – பிஓசி முறை. வலைத்தள புதுப்பிப்பு / வெளிப்பாடுகள். தரைவிரிப்பு  பகுதி. திட்டத்தில் மாற்றம் – 2/3 ஒதுக்கீட்டாளர்களின் ஒப்புதல். திட்ட கணக்குகள் – தணிக்கை. ஒதுக்கீட்டாளர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட நிதியில் 70% திட்டக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட வேண்டும். கட்டுமானம் மற்றும் நில செலவை ஈடுசெய்ய திரும்பப் பெறுதல். திரும்பப் பெறுகிறது  சதவீதம் நிறைவு முறைக்கு விகிதத்தில் இருங்கள். திரும்பப்  பெறுதல் ஒரு பொறியாளர், கட்டிடக் கலைஞர் மற்றும் சி.ஏ. திட்ட வங்கி கணக்குகளை இணங்காத நிலையில் முடக்குவதற்கு RERA க்கு ஏற்பாடு. தாமதத்திற்கான வட்டி வாடிக்கையாளர் மற்றும் விளம்பரதாரருக்கு ஒரே மாதிரியாக இருக்கும். RERA இன் கீழ் ஒரு பில்டர் என்ன தகவலை வழங்க வேண்டும் அடுக்குமாடி குடியிருப்புகளின் எண்ணிக்கை, வகை மற்றும் தரைவிரிப்பு பகுதி  . எந்தவொரு  பெரிய கூட்டல் அல்லது  மாற்றத்திற்கும் பாதிக்கப்பட்ட ஒதுக்கீட்டாளர்களிடமிருந்து ஒப்புதல். விற்கப்படாத சரக்கு மற்றும் நிலுவையில் உள்ள ஒப்புதல்கள்  போன்ற விவரங்களுடன் RERA வலை

Should One Rent Or Buy A Real Estate Property In 2022

Should One Rent Or Buy A Real Estate Property In 2022 India is a land  of eclectic real estate that has always been catering to the needs and wants of several prevailing segments of buyers, owners, developers, and investors. In case you and your family are looking to change your house in the near future, the million-dollar question for you would be whether you should buy or rent in the new year of 2022. A host of  factors including the budget, finances, location, locality, infrastructure, connectivity, utilities, facilities, and neighbourhood influence any consumer's home-buying decision.  Still, wait  and watch and rent-in for the time being is an option that plays in the potential buyer's mind. We attempt to address and answer this million-dollar question for you in the sections to come. From 2021 to 2022   H1 2021  saw Indian real estate move into a downward slump. Given the severity of the second COVID wave, especially during Q2, all segments of the market including new dev

Year 2022 Will Bring Great Opportunities For Indian Real Estate

Year 2022 Will Bring Great new Opportunities For Indian Real Estate A  pandemic is not easy on anyone. But it is when things get truly difficult that we get to discover what we are truly made of. If I were to talk about what the COVID crisis revealed about the nature of the real estate industry, I would say that it revealed a spine made of steel and a soul made of concrete! As an industry, real estate has demonstrated remarkable resilience and we are expecting a robust real estate performance in the coming year. Let us analyze the trends, factors and key ingredients of the real estate forward march in the forthcoming year. Homebuyer is the king The  coronavirus pandemic was a sudden blow to society at large. And while it led to an inevitable and unprecedented slowdown in site visits, what also happened is that the human population as a whole suddenly realized the importance of home. When the whole world went into lockdown mode, people realized that their home is their first and best de

எஸ்பிஐ முதல் எச்டிஎப்சி வரை குறைந்த வட்டியில் ‘வீட்டு கடன்’ பெற ஏற்ற வங்கிகள்..!

எஸ்பிஐ முதல் எச்டிஎப்சி வரை குறைந்த வட்டியில் ‘வீட்டுக் கடன்’ பெற ஏற்ற வங்கிகள்..! குறைந்த  விலையில் மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா போன்ற திட்டங்களின் கீழ் வீட்டுக் கடன் பெறுவதை ஊக்குவித்து வருவதை அடுத்து இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியும், பிற தனியார் வங்கி நிறுவனங்களும் வீட்டுக் கடன் மீதான வட்டி விகிதத்தைக் குறைத்து வருகின்றன. ஸ்டேட் பாங்க் ஆப்  இந்தியா முதல் ஐசிஐசிஐ வங்கி வரை முக்கிய வங்கிகள் சில வீட்டுக் கடன் மீதான வட்டி விகிதத்தை 15 முதல் 30 அடிப்படை புள்ளிகள் அதாவது 0.15 முதல் 0.30 சதவீதம் வரை குறைத்துள்ளன. எனவே  இப்போது வீட்டுக் கடனை குறைந்தபட்சமாக 8.35 சதவீத வட்டி விகிதத்தில் பெறலாம். எனவே நாம் இங்குக் குறைந்த வட்டியில் 'வீட்டுக் கடன்' பெற ஏற்ற வங்கிகள் பட்டியலை இங்குப் பார்ப்போம். எஸ்பிஐ வீட்டுக் கடன் இந்தியாவின்  மிகப் பெரிய வங்கியான ஸேட் பாங்க் ஆப் இந்தியா 30 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடன் மீதான வட்டியில் 25 அடிப்படை புள்ளிகள் அதாவது 0.25 சதவீதம் குறைத்து 8.35 சதவீதமாக அறிவித்துள்ளது. எஸ்பிஐ வங்கி 8.35 தான் வீட்டுக் கடன் சந்தையில் குறைவான வட

முதல் முறையாக ரியல் எஸ்டேடில் முதலீடு பண்ண போறீங்களா? இதை படிச்சிட்டு பண்ணுங்க...

முதல் முறையாக ரியல் எஸ்டேடில் முதலீடு பண்ண போறீங்களா? இதை படிச்சிட்டு பண்ணுங்க...  இப்போதெல்லாம்  மக்கள் தங்கள் சேமிப்புகளை பெரும்பாலும் வீடு அல்லது மனை வாங்குவதில்தான் முதலீடு செய்கிறார்கள். மற்ற எல்லாவற்றையும் விட ரியல் எஸ்டேட் மார்க்கெட் மட்டுமே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டே போகிறது. வீடு வாங்குங்கோ,  மனை வாங்குங்கோ' என்று ரியல் எஸ்டேட் நிறுவனத்தினரும் தற்போது நிறையவே கூவிக் கூவி விற்பனை செய்து வருகின்றனர். டி.வி.க்களில் பெருகி வரும் விளம்பரங்களே இதற்கு சாட்சி. பல லட்சம்  அல்லது கோடிகளை கொட்டி முதலீடு செய்யும் நாம், இதில் உள்ள பிரச்சனை மற்றும் அபத்துகளை பற்றிய தெரிந்துக்கொள்ள வேண்டும். சரி ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்யும் முன் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமானவை சில உண்டு, இதை பற்றி தொடர்ந்து ஸ்லைடரில் பார்க்கலாம். எச்சரிக்கையாக இருக்க வேண்டும் இடம்  வாங்கும்போது மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். கொஞ்சம் ஏமாந்தாலும் போதும், உங்கள் பணத்தில் வாங்கிய வீடு அல்லது மனை வேறொருவரின் பெயருக்குக் கைமாறி விடும் வாய்ப்புக்கள் நிறையவே உள்ளன. இதுபோல், வ

வீடு வாங்கியவுடன் நீங்க செய்ய வேண்டிய முக்கியமான வேலை இதுதான்..!

வீடு வாங்கியவுடன் நீங்க செய்ய வேண்டிய முக்கியமான வேலை இதுதான்..! :வீட்டை கட்டிப்பார் கல்யாணத்தைச் செய்து பார் என்று நம் முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள். இந்த இரண்டுமே நமது வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது. ஆனால் நடைமுறையில் பல சிக்கல்களைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். சரி  கஷ்டப்பட்டு ஒரு வீட்டை வாங்கி விட்டோம். அதன் பின்னர் செய்ய வேண்டிய முக்கியமான வேலைகள் என்ன என்பது குறித்துப் பலருக்குத் தெரிந்திருக்காது. எனவே  வீட்டை வாங்கியவுடன் உடனே என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்துத் தற்போது பார்ப்போமா!! பத்திரத்தைப் பத்திரமாக வைக்க வேண்டும்:  ஒரு  வீட்டின் பத்திரம் என்பது மிகவும் முக்கியமானது. அதனால்தான் அதற்குப் பத்திரம் என்றே நம் முன்னோர்கள் பெயர் வைத்துள்ளனர். மேலும் பத்திரத்தின் ஒரிஜினலை தேவைக்கேற்ப இரண்டு அல்லது மூன்று ஜெராக்ஸ் காப்பிகள் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் வீட்டின் மேல் வங்கி லோன் வாங்குகிறீர்கள் என்றால் வங்கிக்கு ஒரிஜினலை சமர்ப்பிக்கும் முன்னர் தேவையான காப்பிகளை எடுத்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியமானது. டிஜிட்டல் மயத்திற்கு மாற்றுங்கள்: இப்போது

ரியல் எஸ்டேட்டில் 'ஏன்' முதலீடு செய்ய வேண்டும்..? நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய 10 உண்மைகள்..!

ரியல் எஸ்டேட்டில் 'ஏன்' முதலீடு செய்ய வேண்டும்..?  நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய 10 உண்மைகள்..! 30  வருடங்களுக்கு முன்பு ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது என்பது ஒரு ஆடம்பரமாகக் கருதப்பட்டது. நடுத்தர வர்க்கத்தினர் ஆடம்பரமாகக் கருதப்பட்ட இந்த ரியல் எஸ்டேட் தற்போது லாபகரமான தொழிலில் முன்னணியில் இருப்பதால் தற்போது நடுத்தர வர்க்கத்தினர் முதல் பணக்கார்கள் வரை பயமின்றி ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்து வருகின்றனர். பங்குச்சந்தை,  மீயூச்சுவல் பண்ட் போல் போட்ட முதலுக்கு நஷ்டமின்றி இருப்பதோடு பல மடங்கு லாபம் கியாரண்டி என்பது ரியல் எஸ்டேட் துறையில் மட்டுமே உள்ளது. இது உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் ஒருசில உண்மைகளை இங்கு பார்ப்போம். பாதுகாப்பான தேர்வு வீட்டை  விடப் பாதுகாப்பான இடம் ஒரு மனிதனுக்கு இல்லை. அதேபோல் அந்த வீட்டில் செய்யப்படும் முதலீடும் பாதுகாப்பானது. பங்குச்சந்தை மற்றும் கமாடிட்டி தொழிலில் நாம் போடும் முதலீடு மிகக்குறைந்த நாட்களில் பலமடங்கு உயரும் வாய்ப்பு இருக்கின்றது. அதே நேரத்தில் நாம் செய்யும் முதலீடு ஜீரோ ஆகும் அபாயமும் அதில் உள்ளது. ஆனால் ரியல் எஸ்டேட்டை பொருத்தவர

ஹோம் இன்சூரன்ஸ் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை..!!

ஹோம் இன்சூரன்ஸ் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை..!! வீட்டைக்  கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார் என்பார்கள். பெரும்பாலானோர் அவ்வளவு சிரமப்பட்டு கட்டும் வீட்டிற்கு காப்பீடு ஏதும் செய்வதில்லை. வங்கி கடன், அரசு கடன் ஆகியவை பெற்று வீடு கட்டுபவர்கள் கட்டாயமாக காப்பீடு செய்ய வேண்டும் என்பதால் அவர்கள் மட்டும் வீட்டின் மீதான காப்பீட்டு திட்டத்தில் சேர்கிறார்கள். அதுவும் அந்த கடன் முடியும் வரை மட்டுமே. அந்த  வீட்டிற்கான காப்பீடு செய்தவர்களும், தாங்கள் எடுத்துள்ள வீட்டுக் காப்பீடு பாலிசியில் என்னென்ன நிபந்தனைகள் கூறப்பட்டுள்ளன என்பது குறித்த விழிப்புணர்வு என்பது கொஞ்சம் கூட அற்றவர்களாகவே உள்ளனர். அவர்களுக்காவே நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதும், செய்ய வேண்டியதும் இதோ. கனவு வீடு   பிரகாஷ்  பள்ளி ஆசிரியராக வேலை செய்யும் இவர் ஒரு கட்டிய வீட்டை வாங்கினார். அந்த வீட்டிற்கு காப்பீட்டு பாலிசியும் எடுத்தார்.  அந்த  வீட்டின் பாத்ரூமில் இருந்த கெய்செர் தண்ணீர் சூடேறி அளவுக்கதிகமாக இயங்கி தீ பிடித்து அந்த வீட்டின் பாதி உடமைகள் அழிந்தன. அவர்  உரிய இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் சென்று தொடர்பு கொண்ட

அப்பார்ட்மண்டில் வீடு வாங்க திட்டமிட்டிருக்கிறீர்களா? இந்த 10 பொய்களை நம்ப வேண்டாம்..!

அப்பார்ட்மண்டில் வீடு வாங்க திட்டமிட்டிருக்கிறீர்களா? இந்த 10 பொய்களை நம்ப வேண்டாம்..! புதிய  ரியல் எஸ்டேட் விதிமுறையான ரேரா, தூங்கிக் கொண்டிருந்த சொத்து விற்பனை சந்தைக்கு மீண்டும் புத்துயிர் அளித்திருக்கிறது. உங்களில் சிலர் இப்போது ஒரு வீடு வாங்குவதைப் பற்றிக் கருதிக் கொண்டிருக்கலாம். மேலும்  விற்பனையாளர்களும் முகவர்களும் இலவச திட்டங்கள் மற்றும் தள்ளுபடிகளுடன் படையெடுத்துக் கொண்டிருக்கும் நேரம் இது. அவர்களது விற்பனை உச்சங்களை ஆராய்ந்து, உண்மைகளின் அடிப்படையில் ஒரு முடிவெடுங்கள். ஒரு  கட்டுமானர் அல்லது சொத்து, மனை விற்பனையாளர் உங்களிடம் சொல்லும் முதல் விஷயம் சொத்து, மனை விலைகள் ஒருபோதும் வீழ்ச்சியடையவதில்லை என்பதாகும். இதர வார்த்தைகளில் சொல்வதென்றால் விலையைப் பற்றி யோசிக்காதீர்கள். முன்நோக்கி செல்லுங்கள் மற்றும் வாங்கி விடுங்கள் என்றெல்லாம் சொல்லுவார்கள். இந்த விஷயத்தில் முன்பே சொத்து வாங்கிய உங்கள் நண்பர்கள், உறவினர்கள் அல்லது பெற்றோர்களிடமிருந்து மெய்யறிவைப் பெறலாம். எது எப்படியிருப்பினும், முன்பு உண்மைகளாக இருந்தவை இப்போது அப்படி இல்லை. சொத்து வாங்குவதும் பங்கு சந்தை போலத் தான்  சொத

சொத்து வரி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

சொத்து வரி எவ்வாறு கணக்கிடப்படுகிறது? ஒரு  சொத்து வாங்கும் பதிவுக் கட்டணங்கள் மற்றும் செலுத்த வேண்டிய முத்திரைக் கட்டணங்கள் செலுத்த வேண்டும். இதனை தொடர்ந்து அந்த சொத்திற்கான வரியை ஒவ்வொரு வருடமும் தவறாமல் செலுத்த வேண்டும். முதன்மையாக  சொத்து வரி சமுதாயத்தில் தூய்மை, சுகாதாரம், பூச்சிக் கட்டுப்பாடு போன்ற பல்வேறு சேவைகளுக்கு அரசாங்கத்திற்கு வருவாய் அளிக்க செலுத்தப்படுகிறது. நடவடிக்கை ஒரு  நபர் இந்த செலுத்த வேண்டியத் தொகையை செலுத்த மறுத்தால் சட்டரீதியாக நோட்டீஸ் அனுப்பப்படும். மேலும், இந்த நிர்வாகம் தண்ணீர் இணைப்பு போன்ற சில சேவைகளை வழங்க மறுக்கும். சொத்துவரிக் கணக்கீட்டைத் தீர்மானிக்கும் சொத்துவரி காரணிகள்   சொத்துவரி  விதிப்புத் தொகை நகரமன்ற நிர்வாகத்தின் அடிப்படையில் சொத்து உரிமையாளர் செலுத்த வேண்டிய தொகை நிர்ணயிக்கப்படுகிறது. இத்தொகையை தீர்மானிக்க இதர காரணிகளும் உடன், இவை உங்களுக்காக. இதர காரணிகள் 1. சொத்தின்  அமைவிடம் மற்றும் சொத்தின் அளவு  2. மேலும் ஒரு சொத்தின் இயல்பை பொறுத்து, அந்த சொத்து குடிப்பெயருவதற்கு தயாராக இருக்கிறதா அல்லது கட்டுமானத்தின் கீழ் இருக்கிறதா என்பதை பொறுத்தும்

வீட்டுக் கடனுக்கும் அடமானக் கடனுக்கும் என்ன வித்தியாசம்..?

வீட்டுக் கடனுக்கும் அடமானக் கடனுக்கும் என்ன வித்தியாசம்..? வீட்டுக்கடன்  மற்றும் வீட்டு அடமானக் கடன் என்ற இரண்டு வார்த்தைகளும் ஒன்றிலிருந்து மற்றொன்று முற்றிலும் வேறுபட்டவை என்பதை அறியாமலே நாம் அந்த வார்த்தைகளை அடிக்கடிப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இங்கே  இரண்டு வங்கியியல் கருத்துக்களைப் பற்றிய சில குறிப்பிட்ட உண்மைகள் பற்றி விளக்கப்பட்டுள்ளது: பிணையம்   சந்தையிலிருந்து  நிதியைப் பெறுவதற்கு ஒருவர் துணை (collateral) ஈடு வழங்க வேண்டுமென்று கருதப்படுகிறது. இது கிடைக்கப் பெறும் அனைத்து வகை அடமானக் கடன்களுக்கும் பொருந்தக் கூடிய உண்மை தான்.  எனவே,  வீட்டுக்கடன் என்பதே ஒரு வகை அடமானக் கடன் தான் - அந்தக் கடன் வீட்டை ஈடாக வைத்துத் தரப்படுகிறது. அதே சமயத்தில், நீங்கள் உங்கள் இதர சொத்துக்களையும் கடன் பெறுவதற்கான பிணைய ஈடாக வைக்கப் பயன்படுத்திக் கொள்ளலாம். அடமானக் கடன்   ஒரு  அடமானக் கடனில் உங்கள் சொத்து பாதுகாப்புப் பிணையமாக செயல்படுகிறது. இன்னும் எளிமையாகச் சொல்லப் போனால், அடமானக் கடன்களில் உங்கள் சொத்து கடனுக்கு ஈடாக பிணையமாகப் பயன்படுத்தப்படுகிறது.  இந்தியாவில்  பெரும்பாலான வீட்டுக் கடன்க

ரியல் எஸ்டேட் துறையில் இருக்கும் ஜி.எஸ்.டி! பற்றி விரிவான ஒரு அலசல்..

ரியல் எஸ்டேட் துறையில் இருக்கும் ஜி.எஸ்.டி! பற்றி விரிவான ஒரு அலசல்.. இந்தியாவில்  இருந்த பல அடுக்கு வரிவிதிப்பு முறைக்கு மாற்றாக ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இந்தியாவில் சொத்துக்கள் வாங்கும் போது முதலில் ஜி.எஸ்.டி வரி விகிதங்களைத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது. அதன் மூலம் இந்த வரி உங்களின் நிதிநிலைமையின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களைத் துல்லியமாகத் தெரிந்து கொள்ள முடியும். சொந்த வீடு வாங்குவது என்பது வாழ்நாள் முதலீடு மற்றும் மிகவும் விசேசமானதும் கூட. ஆனால் அந்தச் சொத்தின் மதிப்பை தவிர ஏராளமான செலவுகள் இருக்கும் நிலையில், அந்தச் சொத்தை வாங்க திட்டமிடும் போது அவற்றையெல்லாம் மறந்துவிடுவோம். அதில் முக்கியமானது ஜி.எஸ்.டி வரி. ரியல் எஸ்டேட்டில் ஜி.எஸ்.டியை தவிர்ப்பது எப்படி என இங்கே காணலாம். ரியல் எஸ்டேட்டில் ஜி.எஸ்.டி ஏற்படுத்தும் தாக்கங்களை நன்கு புரிந்துகொள்ளும் பொருட்டு, சொத்துக்களை மூன்று வகையாகப் பிரித்துக் கொள்வோம்.   1)கட்டுமான நிலையில் உள்ள சொத்து   2)தயார் நிலையில் உள்ள சொத்து  3)வாடகைக்கு விடும் சொத்து கட்டுமான நிலையில் உள்ள ச

ஒரு ஆடம்பர வீட்டில் இதெல்லாம் இருக்க வேண்டும்.. இல்லைனா வேஸ்ட்..!

ஒரு ஆடம்பர வீட்டில் இதெல்லாம் இருக்க வேண்டும்.. இல்லைனா வேஸ்ட்..! மெதுவாக  வளர்ந்து வந்தாலும், இந்தியாவில் ஆடம்பரத்தில் எந்தவிதமான பின்னடைவும் இல்லை. ஃபோர்ப்ஸ் படி, 2017 இல் இந்தியா 101 பில்லியனர்கள் கொண்டு உலகச் சந்தையில் கம்பீரமாக உள்ளது. கூடுதலாக,  கிட்டத்தட்ட 2.36 லட்சம் மில்லியனர்களுடன், உலக அளவில் ஈர்க்கக்கூடிய அளவு நான்காவது இடத்தில் இந்தியா உள்ளது. இப்படி வளம் கொழிக்கும் இந்தியாவில் ரியல் எஸ்டேட் பல தரப்பட்ட வளர்ச்சியை அடைந்து வருகிறது. இதில் ஆடம்பர வீடுகளுக்குப் பஞ்சமில்லை. ஆடம்பர  வீட்டில் பில்லியனர்கள் மற்றும் மில்லியனர்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள் யாவை..? அனைத்தையும் தாண்டி கீழ் கொடுக்கப்பட்டுள்ள அம்சங்கள் இருந்தால் தான் இது ஒரு ஆடம்பர வீடு. அப்படி என்ன இருக்கிறது.  தொழில்நுட்ப ரீதியாகத் திறமை ஒவ்வொரு  ரியல் எஸ்டேட் டெவலப்பர் மற்றும் வீடு வாங்குபவர் ஒரு ஆடம்பர வீட்டில் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தில் முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்று விரும்புவர். எனவே, ஆட்டோமேஷன் ஒரு முக்கிய வார்த்தை ஆகிறது. சொத்து விலை  குறியீட்டைப் பொறுத்து, தொழில்நுட்ப முன்னேற்றத்தின் அளவு மாற

வீடு வாங்கத் திட்டமிடுகிறீர்களா? அப்ப இதைப் படிங்க..!

வீடு வாங்கத் திட்டமிடுகிறீர்களா? அப்ப இதைப் படிங்க..! தற்போது  வீடு வாங்கும் எண்ணம் உங்களுக்கு இருப்பின், உங்கள் சொந்த உபயோகத்திற்காக மட்டும் வாங்குங்கள். இது முதலீடு செய்வதற்கான சரியான களம் அல்ல, ஏனெனில் அடுத்து வரும் இரு ஆண்டுகளிலும் சொத்துக்களின் மதிப்பு அதிகரிப்பதற்கான வாய்ப்பே இல்லை. வீடு  வாங்குவதற்குத் திட்டமிடுகிறீர்கள் என்றால், அதனை வாங்குவதற்கு இதுவே சரியான சமயம். ஏனெனில் வட்டி விகிதங்கள் மிகவும் குறைந்திருப்பதோடு, பெருமளவில் வீடுகளைக் கட்டி முடித்துள்ள நிறுவனங்கள், அவற்றை விற்றால் போதும் என்ற நோக்கில் சலுகை விலையில் விற்கத் தயாராக உள்ளனர். சரியான வாய்ப்பு   ரியல் எஸ்டேட்  ரெகுலேட்டரி அத்தாரிட்டி (ஆர்இஆர்ஏ) போன்ற ஒழுங்குமுறை, நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் ஒழுங்கு நடவடிக்கைகளினால், கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெரும்பாலானோர் புதிய ப்ராஜெக்ட்கள் தொடங்குவதை விடுத்து, முடிக்கப்படாத ப்ராஜெக்ட்களை விரைவாக முடித்துக் கொடுப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். பொற்காலம்   எனவே,  வீடு வாங்க விரும்புவோர் அடுத்த மூன்று அல்லது ஆறு மாதங்களுக்குள் முடித்துக் கொடுக்கப்படும் ப்ராஜெக்ட்கள

குறைந்த செலவில் நீச்சல் குளம் அமைக்கச் சூப்பர் ஐடியா..!

குறைந்த செலவில் நீச்சல் குளம் அமைக்கச் சூப்பர் ஐடியா..! உங்கள்  வீட்டில் தேவையான அளவு இடம் இருந்தால் நிச்சயம் நீச்சல் குளம் அமைப்பது சிறப்பான ஒன்றுதான். வீட்டில்  நீச்சல் குளம் இருப்பது சிறந்த பொழுது போக்காக இருப்பது மட்டுமின்றி, வீட்டை விற்கும் போது அதன் மதிப்பும் அதிகரிக்கும். உங்கள் பட்ஜெட்டில் துண்டு விழாமல் நீச்சல் குளத்தை அமைக்கத் திட்டமிடுகிறீர்கள் எனில், பின்வரும் பணத்தை மிச்சப்படுத்தும் வழிமுறையைப் பின்பற்றுங்கள். வினைல் லைனர் நீச்சல் குளங்கள் (vinyl-liner pool)   சந்தையில்  கிடைக்கும் மூன்று வகை நீச்சல் குளங்களில் ஒன்றான வினைல் லைனர், பைபர் கிளாஸ் மற்றும் கான்கிரீட்-ஐ உள்ளடக்கியது. மிகவும் மலிவு விலை திட்டமாக அறியப்படும் இது ரூ1,00,000 முதல் ரூ3,00,000 வரை கிடைக்கிறது. இது  மலிவு விலையில் கிடைத்தாலும், இவற்றை அடிக்கடி பராமரிக்க வேண்டும் மற்றும் இதற்கு 7-15 ஆண்டுகள் என்ற குறுகிய வாழ்நாள். ஆழமற்ற நீச்சல் குளம் (Shallow Pool) நீங்கள்  அதிக அளவு பணத்தைச் செலவு செய்யாமல், குறைந்த இடத்திலேயே நீச்சல் குளம் வேண்டுமென்றால் சிறு நீச்சல் குள வடிவமைப்புள்ள நிலத்திற்கு உள்ளான நீச்சல் குள

பணி ஓய்வுக்குப் பிறகு வீடு வாங்க வேண்டுமா? இதைப் பாலோ பண்ணுங்க..!

பணி ஓய்வுக்குப் பிறகு வீடு வாங்க வேண்டுமா? இதைப் பாலோ பண்ணுங்க..! உங்களின்  நண்பர்கள் சொத்துக்களில் முதலீடு செய்யும் போது நீங்கள் வேறு பிரச்சினைகளைக் கையாண்டு கொண்டு இருந்திருக்கலாம். உங்களுக்கான பொறுப்புகள் வேறாக இருந்திருக்கலாம்.  எது  எப்படியிருந்தாலும், தற்போது நீங்கள் ஓய்வு பெற்று விட்டதால் கண்டிப்பாக உங்களுக்கு வீடு தேவை. ஆனால் பணத்தைத் திரட்டுவது மிகவும் கடினமாக உள்ளது மற்றும் சொத்துக்களின் விலையும் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. பல்வேறு  வழிகளில் பணத்தைச் சேமிப்பதன் வாயிலாக உங்களின் பட்ஜெட்டுக்கு உள்ளேயே உங்கள் கனவு இல்லத்தை நிஜமாக்க முடியும். பணிஓய்விற்குப் பிறகான கனவு இல்லத்திற்குத் திட்டமிடும் போது, உங்களால் பணத்தை மேலாண்மை செய்ய முடியும் வழிகளின் பட்டியல் இதோ.. அளவு   பொதுவாகப்  பணி ஓய்விற்குப் பிறகான இல்லத்தில் நீங்களும், உங்களின் வாழ்க்கைத் துணையும் என இருவர் மட்டுமே இருப்பீர்கள். இதனால் தனது சிறிய அளவிலான இல்லம் பரிந்துரைக்கப்படுகிறது. சிறிய அளவிலான சொத்திற்குக் குறைவான பணம் செலுத்தினால் போதும் என்பதால் உங்கள் பட்ஜெட்டும் குறையும். அதுமட்டுமின்றிப் பெரிய வீட்டை

சொந்த வீட்டை வாங்க சரியான வயது எது..? இளைஞர்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டியவை...

சொந்த வீட்டை வாங்க சரியான வயது எது..? இளைஞர்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டியவை... வீடு என்பது  அத்தியாவசியத் தேவைகளில் மிக முக்கியமானது. அது நமக்கான சொந்த வீடாக இருக்கும் பட்சத்தில் நினைத்தபடி வாழலாம், அதுமட்டும் அல்லாமல் எத்தனை பேரை வேண்டுமானாலும் தங்க வைக்கலாம்.  சுவரில்  வரையலாம், கிறுக்கலாம், சத்தமாகப் பாட்டுப் பாடலாம். வாடகை வீட்டில் அது இயலாது. வீட்டின் உரிமையாளர் உங்களை வெளியேற்றி விடுவார். பின்பு மறுபடியும் வேறொரு வீடு தேடி அலைய வேண்டும். வீட்டின்  மீதும், வீட்டு மனைகளின் மீதும் முதலீடு செய்வதென்பது நீங்கள் மிகவும் சுதந்திரமாய் வாழ வழி செய்கின்றீர்கள் என்று அர்த்தம். ஒவ்வொருவரின் கனவு   சொந்த வீடு  என்பது நம் ஒவ்வொருவரின் கனவு. ஒரு வீட்டினை வாடகைக்கு எடுத்துத் தங்குவதை விட நம் இடத்தில் கட்டப்படும் வீடும், நம் சொந்த சம்பாத்தியத்தில் வாங்கும் வீட்டில் வாழ்வதும் தரும் மகிழ்ச்சி அலாதியானது. வீட்டிற்காகச் செய்யப்படும் முதலீடானது மகிழ்ச்சி என்பதைக் காட்டிலும் புத்திசாலித்தனம் என்றும் சொல்லலாம். எவ்வளவு விரைவாக நீங்கள் வீட்டிற்கான முதலீட்டிற்காகப் பணம் சேமிக்கின்றீர்களோ அவ்வளவு தூரம் உங

பெங்களூர் நகரத்தை விட்டு வெளியேறும் ஐடி ஊழியர்கள்.. என்ன நடக்கிறது..?

பெங்களூர் நகரத்தை விட்டு வெளியேறும்  ஐடி ஊழியர்கள்.. என்ன நடக்கிறது..? கொரோனாவின்  தாக்கம் மக்களையும் நாட்டையும் மிகப்பெரிய அளவில் மாற்றியுள்ளது,  அதிலும் குறிப்பாகப் பெரு நகரங்களில் மிகப்பெரிய மாற்றங்களை மக்கள் சந்தித்து வருகின்றனர். வீதிக்கு ஒரு ஐடி நிறுவனங்கள் நிறைந்திருக்கும் பெங்களூரில் கொரோனா-க்குப் பின் மக்கள் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளனர். இந்த முடிவுகள் ரியல் எஸ்டேட் நிறுவனங்களைத் தலைகீழாகப் புரட்டிப் போடக் காத்துக் கொண்டு இருக்கிறது. பெங்களூரில்  இருக்கும் கோடிக்கணக்கான மக்கள் கொரோனா வந்த பின்பு ஊழியர்கள் Work From Home செய்து வருகின்றனர். இதிலும் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் கொரோனாவுக்குப் பின்பு செலவுகளைக் குறைப்பதற்காக 50 முதல் 75 சதவீத ஊழியர்களை நிரந்தரமாக வீட்டில் இருந்தே பணியாற்றும் வகையில் திட்டமிட்டு வருகிறது இதன்  எதிரொலியாக வாடகை வீட்டில் இருப்பவர்களும், சொந்த வீடு வாங்கத் திட்டமிடுபவர்களுக்கும் பெங்களூரின் சிட்டி பகுதியில் வாங்காமல் சிட்டிக்கு வெளியில் வாங்க முடிவு செய்துள்ளனர். மக்களின் மன மாற்றம்   பெங்களூரில்  இருக்கும் பெரும்பாலான ஊழியர்கள் ஐடி அல்லது அதைச்

ரியல்எஸ்டேட்டில் முதலீடு செய்யும் என்ஆர்ஐ கவனிக்கவேண்டியவை!

ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யும் என்ஆர்ஐ-கள் கவனிக்க வேண்டியவை! வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாங்கள் சம்பாதித்த பணத்தை இந்தியாவில் முதலீடு செய்யும் வழிகளை ஆராய்வதில் புகழ் பெற்றவர்கள்.  சிலர் சொத்துக்களைப் பல்வேறு வகையில் பிரித்து முதலீடு செய்ய விரும்புவர் , மற்றவர்கள் பணி ஓய்விற்குப் பிறகு தாய்நாட்டில் வசிக்க வீடு போன்ற சொத்துக்களில் முதலீடு செய்வர். இந்தியாவிற்கு  வரும் வெளிநாட்டு மூலதனத்தை அதிகரிக்கும் வகையில், இந்தியாவில் வசிக்காதவர்களால் செய்யப்படும் முதலீடுகளுக்கான சில ஒழுங்குமுறை விதிகளை எளிமையாக்கி உள்ளது ரிசர்வ் வங்கி. வெளிநாட்டுப் பரிமாற்ற மேலாண்மை சட்டம் (Foreign Exchange Management Act -FEMA) வெளிநாடுவாழ் இந்தியர்களின் ரியஸ் எஸ்டேட்  பரிவர்த்தனைகளை நிர்வகிக்கிறது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்திய ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யும் முன்பு கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய விதிகள் இதோ. சொத்தின் வகை   வெளிநாடு வாழ் இந்தியர்கள் வர்த்தக அல்லது குடியிருப்புச் சொத்துக்களில் மட்டுமே முதலீடு செய்ய முடியும். மரபுவழியாகவோ அல்லது பரிசாகவோ  கிடைக்காத விவசாயச் சொத்துக்களை (பண்

இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் 3D பிரிண்டிங் வீடு கட்டி சாதனை.. மாஸ் காட்டும் எல்&டி..!

இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் 3D பிரிண்டிங் வீடு கட்டி சாதனை.. மாஸ் காட்டும் எல்&டி..! அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா போன்ற நாடுகளில்  கட்டுமானத் துறையில் பல தொழில்நுட்ப உதவிகளுடன் வீட்டைக் குறைந்த காலகட்டத்தில் கட்டுவதற்கு 3D பிரிண்டிங் முறையைப் பயன்படுத்தி ஆராய்ச்சி செய்து  வரும் நிலையில், எல்&டி நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக அதுவும் நம்ம தமிழ்நாட்டில் 3D பிரிண்டிங் முறையைப் பயன்படுத்தி வெற்றிகரமாக வீட்டை கட்டி முடித்துள்ளது. L&T  கட்டுமான நிறுவனம்   21 பில்லியன் டாலர் மதிப்புடைய எல்&டி கட்டுமான நிறுவனம் முதல் முறையாக இந்தியாவில் 3D பிரிண்டிங் முறையில் சிமெண்ட் கலவையைக் கொண்டு உறுதியான வீட்டைக் கட்டி முடித்துள்ளது.  இதுவும் G+1 அதாவது தரைதளத்திற்கும் மேல் ஒரு அடுக்கு கொண்ட வீட்டைத் தமிழ்நாட்டில் கட்டி ரியல் எஸ்டேட் துறையில் புதிய புரட்சியைச் செய்துள்ளது. 3D பிரிண்டிங் முறை மத்திய அரசு 2022ஆம் ஆண்டுக்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் வீடு எனத் திட்டத்தின் கீழ் 60 கோடி வீடுகளைக் கட்டும் திட்டத்தைச் செயல்படுத்தி வரும் நிலைமையில், எல்&டி நிறுவனத்தின் இந்த 3

வீடு ரெடின்னா சொல்லுங்க.. உடனே வாங்க ரெடி.. சென்னைவாசிகள் அசத்தல்..!

வீடு தயார்னா சொல்லுங்க.. உடனே வாங்க ரெடி.. சென்னைவாசிகள் அசத்தல்..! இந்திய ரியல் எஸ்டேட்  துறை கொரோனா தொற்று மற்றும் லாக்டவுன் அறிவிப்பு மூலம் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்ட நிலையில் மத்திய அரசு இத்துறையை மேம்படுத்த பல்வேறு ஊக்கத் திட்டங்களை அறிவித்தது.  இதேபோல்  பல மாநில அரசுகள் குறிப்பாக மாகராஷ்டிர மாநில அரசு ரியல் எஸ்டேட் வர்த்தகத்தை ஊக்குவிக்கப் பல சலுகைகள், வரிக் குறைப்பு, கட்டண ரத்து என அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்தச்  சூழ்நிலையில் இந்திய மக்களின் முடிவுகளால் ரியல் எஸ்டேட் துறையில் மிக முக்கியமான மாற்றம் ஏற்பட்டு உள்ளது. ரியல் எஸ்டேட் வர்த்தகம்   பொதுவாக  இந்தியாவில் ஒரு ரியல் எஸ்டேட் திட்டம் அறிவிக்கப்பட்டுச் சில மாதங்களிலேயே அனைத்துப் பிளாட்கள் அல்லது வீடுகள் விற்பனையாகி விடும். அதிலும் குறிப்பாகப் பிரபலமான நிறுவனம் அல்லது முன்னணி நிறுவனங்களின் கட்டுமான திட்டம் என்றால் டிமாண்ட் சற்று அதிகமாகவே  இருக்கும். 2020ல் பெரும் மாற்றம்   இதனால்  வீடுகளைக் கட்டி முடிக்காத முன்பே பெரும்பாலான வீடுகள் விற்பனை ஆகி வரும் நிலையில் 2020க்குப் பின் மக்கள் மத்தியில் ரியல் எஸ்டேட் வர்த்தகம

சொந்த வீடு வாங்க இது சரியான நேரமா? ரியல் எஸ்டேட் துறையின் உண்மையான நிலவரம்..!

சொந்த வீடு வாங்க இது சரியான நேரமா? ரியல் எஸ்டேட் துறையின் உண்மையான நிலவரம்..! கொரோனா  காலகட்டத்தில் முடங்கிபோன முக்கிய துறைகளில் ரியல் எஸ்டேட் துறையும் ஒன்று. இதற்கு பல காரணங்கள் உண்டு. குறிப்பாக கடந்த 2016ம் ஆண்டில் இருந்தே முடக்கம் தான் என்கின்றனர் நிபுணர்கள். ஏனெனில்  எப்போது பணமதிப்பிழப்பு நடவடிக்கை வந்ததோ, அப்போதிருந்தே ரியல் எஸ்டேட் துறையில், நிதி நெருக்கடி நிலவி வருகின்றது. அதன் பிறகு ஜிஎஸ்டி என அடுத்தடுத்த பிரச்சினைகள் வந்தன. தற்போது  கொரோனாவால் அடிப்படை வாழ்வாதாரத்திற்கே பலரும் கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பலரின் வேலையும் பறிபோயுள்ளது. இந்த நிலையில் அத்தியாவசியம் தவிர அனைத்து முதலீடுகளும் தவிர்க்கப்பட்டன. எனினும் தற்போது பொருளாதாரம் வேகமாக மீண்டு வந்து கொண்டுள்ளது. முடங்கி போன ரியல் எஸ்டேட் துறை இதனால்  வீடுகள், அலுவலகங்கள் என சொத்து விற்பனைகள் முற்றிலும் முடங்கியது. சொல்லப் போனால் வாங்க ஆள் இல்லாமல் கட்டி வைத்த வீடுகள் காற்று வாங்கிக் கொண்டிருந்தன. இதே கட்டாமல் பாதியில் நிற்கும் வீடுகள் நிதி நெருக்கடியினால் தேங்கி நிற்கின்றன. இப்படி பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் ரியல